சீனா உடனான இந்தியாவின் உறவுபற்றி பேச்சுவார்த்தை

சீனா உடனான இந்தியாவின் உறவுபற்றி பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திரமோடி இன்று அந்நாட்டுக்கு பயணிக்க உள்ளார்.

சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகியநாடுகளை உள்ளடக்கியது ஷங்காய் கூட்டுறவு அமைப்பு. இந்த அமைப்பின் மாநாடு வரும் ஜூன் மாதம் ஷங்காய் நகரில் நடை பெறுகிறது.

இதற்கு முன் நடை பெறும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத் துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏற்கெனவே ஷங்காய் நகருக்குச் சென்றுள்ளார். அவர் டோக்லாம் விவகாரம் உட்பட இந்தியா – சீனா இடையிலான பலபிரச்னைகள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, கடந்த 13ஆம் தேதி இந்தியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனாசென்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்துப்பேசினார்.

இந்நிலையில், இந்தியா – சீனா ஆகிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் சீனாவில் உள்ள வுஹான் நகரில் சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஏப்ரல் 27, 28 ஆகிய நாட்களில் நடைபெறும் இந்த உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று சீனா புறப்படுகிறார்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் மோடி சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட அந்நாட்டு உயர்அதிகாரிகளுடன் இந்தியா – சீனா இடையிலான முக்கிய விவகாரங்கள் பற்றியும் இதரசர்வதேச பிரச்சனைகள் பற்றியும் ஆலோசிக்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...