நீட்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஏற்ப்பட்ட தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் நீட்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் இதரமாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போதும், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, நீட்தேர்வை நடத்தும் மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE, கடந்த ஆண்டில் 149ஆக இருந்த தேர்வு மையங்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டு 170ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் நீட்தேர்வு எழுதும், ஒருலட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்களுக்கு, அந்த 170 மையங்களில் இடம் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கூடுதலாக, 25 ஆயிரத்து 206 மாணவர்களுக்கு தமிழ்நாட்டில், தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும், தேர்வு மையங்களுக்கான தட்டுப்பாடு எழுந்ததாகவும், இந்தநிலை, தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்களில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், மதுரை, திருச்சி, திருநெல்வேலியைச் சேர்ந்த நீட்தேர்வெழுதும் மாணவர்களுக்கு, சென்னைக்குப் பதிலாக, அவர்களுக்கு அருகே இருக்கும் கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழை தேர்வுமொழியாக குறிப்பிட்டுள்ள 24 ஆயிரத்து 720 மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...