நிர்மலா சீதாராமனின் கூட்டத்தில் நடந்தது என்ன? மத்திய அரசுத்தரப்பில் விளக்கம்

கர்நாடகாவில் வெள்ள நிலவர ஆய்வின்போது அம்மாநில அமைச்சரை கடிந்துகொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்டதாக விமர்சனங்கள் வெளியாகின. இந்நிலையில் அச்சம்பவம் குறித்து மத்திய அரசுத்தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் நிலவர ஆய்வின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், அம்மாநில அமைச்சரை கடிந்து கொள்ளும் வகையில் நடந்ததாக நேற்று விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில் அதுகுறித்து மத்திய அரசுசார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,
குடகு மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விசாரித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது மாநில அமைச்சர் ரமேஷ் இடையில் குறுக்கிட்டு அதிகாரிகள்கூட்டத்தில் பங்கேற்க அழைத்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவத்தினரின் குறைகளை அறிவது தமதுகடமை என்றும், அந்தச்சந்திப்பு தமது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருப்பதாகவும் மத்திய அமைச்சர் எடுத்துக்கூறிய போதும், அந்தச் சந்திப்பை உடனடியாக நிறுத்த மாநில அமைச்சர் நிர்பந்தித்ததாக அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து நிலைமை மோசமடைவதை தவிர்க்கும் வகையில் மத்திய அமைச்சர் தனதுசந்திப்பை நிறுத்தி வைத்து விட்டு அதிகாரிகள் கூட்டத்திற்கு சென்றதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்தகூட்டத்தில் பத்திரிகையாளர்களும் இருந்ததாகவும் இதுவழக்கத்திற்கு மாறானது என்றும் அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

மாநில அமைச்சரின் இச்செயல் எதிர்பாராதது என்றும் மேலும் மத்திய அமைச்சரை பற்றி அவர் தரக்குறைவாக சிலவார்த்தைகளை பேசியதாகவும் இது மாநிலங்களவையின் மாண்புக்கே இழுக்கு என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதுதவிர மத்திய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின் போது ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அமைச்சகம் என்ற குடும்பத்தின் ஓர் அங்கம் என்பதை குறிக்கும் வகையில் பரிவார் என்ற வார்த்தையை பயன் படுத்தியதாகவும் ஆனால் அதுவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...