இரண்டாவது கட்டமாக 55,000 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து

மத்திய அரசு இரண்டாவது கட்டமாக எடுத்த நடவடிக்கை மூலம் 55,000 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக போலி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றை முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

முக்கியமாக, நிதி நிலை அறிக்கைகள், ஆண்டறிக்கைகளை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.


போலி நிறுவனங்களை அடையாளம் கண்டறிந்து முடக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக ஏற்கெனவே 2.26 லட்சம் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட ஆண்டுகளாக கணக்குகளை தாக்கல் செய்யாமல் இருந்ததன் அடிப்படையில் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்போது, இரண்டாவது கட்டமாக 55,000 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. கருப்புப் பண பரிமாற்றத்துக்கு தொழில் துறையை பயன்படுத்தக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

இது தவிர சட்டவிரோத செயல்களுக்கு நிதி அளிப்பது, போதைப் பொருள் கடத்தல் போன்றவை தொழில்துறை நிறுவனங்களின் பெயரில் நடைபெறுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது.


சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளைக் கொண்ட மேலும் பலநிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நிறுவனங்கள் சட்டத்தை மத்திய அரசு உறுதியாக கடைப்பிடிக்கும்.

நன்றி மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சர் பி.பி.செளதரி

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...