புதிய கண்டு பிடிப்புகளின் பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும்

புதிய கண்டு பிடிப்புகளின் பலன்கள்  மக்களை சென்றடைய வேண்டும். இதில் உள்ள தடைகளை உடைத் தெறிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

பிரதமரின் அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை குழு உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

அப்போது பிரதமர் பேசியதாவது: அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் பலன்கள் சாமானியமக்களை சென்றடைய வேண்டும். மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதுடன், அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கவேண்டும்.

கல்வி நிறுவனங்கள், ஆய்வகங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசின் பல்வேறுதுறைகள் இடையே வலுவான தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும். கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களிலேயே புதிய கண்டுபிடிப்புகள் தேங்கிவிடக்கூடாது. இதில் உள்ள தடைகளை உடைத்தெறிய வேண்டும்.

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் திறமைகளை அடையாளம்கண்டு அதை வளர்ப்பதற்கான வழிகளை மேம்படுத்த வேண்டும். மாவட்ட மற்றும் பிராந்திய அளவிலான அடல் ஆய்வகங்களுடன் இணைப்பு ஏற்படுத்தவேண்டும். வேளாண் வருமானத்தை அதிகரிப்பது, நாள்பட்ட மற்றும் மரபணு நோய்களுக்கு தீர்வு, கழிவுப்பொருட்கள் மேலாண்மை, இணையதள பாதுகாப்பு போன்றவற்றுக்கு ஆய்வில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...