முன்பு வீரர்களின் தலையை மட்டுமே வெட்டி அனுப்பியவர்கள் இன்று வீரர்களையே அனுப்புகிறார்கள்

கடந்த ஆட்சியில் தங்களிடம் பிடிபட்ட இந்தியவீரர்களின் தலையை வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான், இப்போது, நமதுவீரரை பத்திரமாக திருப்பி அனுப்பும் அளவுக்கு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோதாவில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த ஆட்சியில் பாகிஸ்தான் நமது நாட்டு விஷயத்தில் எப்படி நடந்து கொண்டது? இப்போது அதில் எப்படிமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். முன்பு நமது எல்லையில் புகுந்து நமது ராணுவ வீரர்களின் தலையை துண்டிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் அட்டூழியத்தில் ஈடுபட்டது. ஆனால், இப்போது, தங்களிடம் பிடிபட்ட நமது விமானப் படை கமாண்டரை 48 மணிநேரத்தில் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு இப்போதைய மத்திய அரசு எந்தமாதிரியான பாடத்தைக் கற்பித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும், நமது நாட்டுக்கும் எந்தமாதிரியான பணிகளை ஆற்றியது? குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு அவர்கள் எதையும் செய்யவில்லை. மேலும், ஊழல் நிறைந்த ஆட்சியாகவே முந்தைய மத்தியஅரசு இருந்தது. ஆனால், இப்போதைய அரசு அனைத்தையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, நேர்மை, பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பான திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து சென்றுள்ளோம் என்றார் அமித்ஷா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...