நாட்டுக்கு மோடி வேண்டுமா? அல்லது குழப்பம் வேண்டுமா?

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மத்தியில் மீண்டும் அமைய வேண்டுமா? அல்லது குழப்பத்தை கொண்ட எதிர்க்கட்சிகள் தலைமையிலான அரசு வேண்டுமா? என்று நாட்டு மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக தனது வலைதள பக்கத்தில் ஜேட்லி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணி, தன்னைத் தானே அழித்து கொள்ளும் கூட்டணியாகும். இதில் கருத்து வேறுபாடுகளை கொண்ட கட்சிகள் தான் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அணியில் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை. அதுவே அக்கூட்டணியில் பிரச்னையாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

முழுமையான தலைவர் கிடையாது. அவரும் தலைவராக முயற்சித்து விட்டார். அவர் பரிசோதித்து பார்க்கப்பட்டுவிட்டார். ஆனால் தோல்விதான் கிடைத்தது. பிரச்னைகளை சரியாக புரிந்துகொள்ளும் திறன் ராகுலிடம் இல்லை. குழப்பம் நிலவும் கூட்டணிக்கு தலைமை வகிக்க அவர் விரும்புகிறார்.

எதிர்க்கட்சி கூட்டணியில் தெளிவில்லை. அக்கூட்டணி எளிதில் சிதைந்துவிடும். அக்கூட்டணியில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடங்களை பெற போவதில்லை. அந்தகூட்டணிக்கு என்று நிலையான கொள்கையும் இல்லை. அக்கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும், அதிகபட்ச குறிக்கோள், சுயநலம் கொண்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் சுதந்திரமாக செயல்படும் பல தலைவர்கள் உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைத் தவிர்த்து, பிற அரசியல் கட்சிகள் கடந்தகாலங்களில் பாஜகவுடன் நட்பு பாராட்டியவைதான். அக்கட்சிகளின் சித்தாந்தங்கள், தொகுதிகள் தொடர்பான நிலைப்பாடு ஆகியவை மிகவும் வித்தியாச மானவையாகும்.

அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை பாருங்கள். தலைவர்கள் பிரச்னையேகிடையாது. கூட்டணியின் தலைவர் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. தேசியஜனநாயகக் கூட்டணிக்கு பிரதமர் நரேந்திர மோடியே தலைமை வகிக்கிறார். தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றால், அவரே பிரதமராக மீண்டும் பதவியேற்பார்.

அவரது தலைமையை தேசமே ஏற்றுக் கொண்டு விட்டது. அவருக்கு மக்களிடையே அதிகசெல்வாக்கு உள்ளது. அவரது சாதனைகளே, அவருக்காக பேசும். வரும் மக்களவைத் தேர்தலானது, நம்பிக்கையான தலைவர் மோடி மற்றும் தலைவரை முன்னிறுத்தாத எதிர்க்கட்சி அணிக்கு இடையேயான போட்டியாக இருக்கும். எதிர்க் கட்சி கூட்டணியில் ஏராளமான தலைவர்கள் இருக்கின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரும், பிறரை சதியால் வெளியேற்ற முயற்சிப்பார்கள். தற்காலிக அரசை தருவது குறித்து மட்டுமே அவர்களால் வாக்குறுதி அளிக்கமுடியும். இதனால் குழப்பம்தான் ஏற்படும். எனவே, மக்களவை தேர்தலானது நாட்டுக்கு மோடி வேண்டுமா? அல்லது குழப்பம் வேண்டுமா? என்பதை தீர்மானிப்பதாக இருக்கும் என்று அந்தப் பதிவுகளில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...