நாட்டுக்கு மோடி வேண்டுமா? அல்லது குழப்பம் வேண்டுமா?

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மத்தியில் மீண்டும் அமைய வேண்டுமா? அல்லது குழப்பத்தை கொண்ட எதிர்க்கட்சிகள் தலைமையிலான அரசு வேண்டுமா? என்று நாட்டு மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக தனது வலைதள பக்கத்தில் ஜேட்லி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணி, தன்னைத் தானே அழித்து கொள்ளும் கூட்டணியாகும். இதில் கருத்து வேறுபாடுகளை கொண்ட கட்சிகள் தான் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அணியில் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை. அதுவே அக்கூட்டணியில் பிரச்னையாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

முழுமையான தலைவர் கிடையாது. அவரும் தலைவராக முயற்சித்து விட்டார். அவர் பரிசோதித்து பார்க்கப்பட்டுவிட்டார். ஆனால் தோல்விதான் கிடைத்தது. பிரச்னைகளை சரியாக புரிந்துகொள்ளும் திறன் ராகுலிடம் இல்லை. குழப்பம் நிலவும் கூட்டணிக்கு தலைமை வகிக்க அவர் விரும்புகிறார்.

எதிர்க்கட்சி கூட்டணியில் தெளிவில்லை. அக்கூட்டணி எளிதில் சிதைந்துவிடும். அக்கூட்டணியில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடங்களை பெற போவதில்லை. அந்தகூட்டணிக்கு என்று நிலையான கொள்கையும் இல்லை. அக்கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும், அதிகபட்ச குறிக்கோள், சுயநலம் கொண்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் சுதந்திரமாக செயல்படும் பல தலைவர்கள் உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைத் தவிர்த்து, பிற அரசியல் கட்சிகள் கடந்தகாலங்களில் பாஜகவுடன் நட்பு பாராட்டியவைதான். அக்கட்சிகளின் சித்தாந்தங்கள், தொகுதிகள் தொடர்பான நிலைப்பாடு ஆகியவை மிகவும் வித்தியாச மானவையாகும்.

அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை பாருங்கள். தலைவர்கள் பிரச்னையேகிடையாது. கூட்டணியின் தலைவர் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. தேசியஜனநாயகக் கூட்டணிக்கு பிரதமர் நரேந்திர மோடியே தலைமை வகிக்கிறார். தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றால், அவரே பிரதமராக மீண்டும் பதவியேற்பார்.

அவரது தலைமையை தேசமே ஏற்றுக் கொண்டு விட்டது. அவருக்கு மக்களிடையே அதிகசெல்வாக்கு உள்ளது. அவரது சாதனைகளே, அவருக்காக பேசும். வரும் மக்களவைத் தேர்தலானது, நம்பிக்கையான தலைவர் மோடி மற்றும் தலைவரை முன்னிறுத்தாத எதிர்க்கட்சி அணிக்கு இடையேயான போட்டியாக இருக்கும். எதிர்க் கட்சி கூட்டணியில் ஏராளமான தலைவர்கள் இருக்கின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரும், பிறரை சதியால் வெளியேற்ற முயற்சிப்பார்கள். தற்காலிக அரசை தருவது குறித்து மட்டுமே அவர்களால் வாக்குறுதி அளிக்கமுடியும். இதனால் குழப்பம்தான் ஏற்படும். எனவே, மக்களவை தேர்தலானது நாட்டுக்கு மோடி வேண்டுமா? அல்லது குழப்பம் வேண்டுமா? என்பதை தீர்மானிப்பதாக இருக்கும் என்று அந்தப் பதிவுகளில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...