முஸ்லிம்கள் என்ன பயங்கரவாதிகளா?

மக்களவைத் தேர்தலில் ஒவ்வொருகட்ட  வாக்குப்பதிவிலும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து அவர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விழும்வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. மோடிஅலை வாராணசி, ஜார்க்கண்டில் அண்மையில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் நிரூபணமானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பலர்சேர்ந்து வருகிறார்கள்.

ஆனால் மறு பக்கத்தில், எதிர்க் கட்சிகள் கூட்டணியில் தில்லியிலும் சரி, பிகாரிலும்சரி ஒற்றுமை இல்லை. எதிர்க் கட்சிகளுக்கு வாக்களித்தால், அக்கட்சிகள் என்ன பணிசெய்யும் என மக்களுக்கு தெரியவில்லை.

பிகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 35இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும். பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்வதைதவிர்க்கிறார். இதேபோல், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரசாரம் செய்யவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற இடங்களைக் காட்டிலும் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் என நம்புகிறேன். மக்களவைத் தேர்தலில் பயங்கரவாதம், தேசியவாதம் ஆகியவை முக்கிய விவகாரங்களாக விவாதிக்கப்படுகிறது. அதேபோல் வளர்ச்சிவிவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு மக்கள் அதிகளவில் ஆதரவு அளிக்கின்றனர்.

பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவதற்கு மத்தியஅரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பொய்யான பிரசாரம் செய்துவருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று அக்கட்சிகள் தெரிவிக்கின்றன. அப்படியெனில், முஸ்லிம்கள் என்ன பயங்கரவாதிகளா? என்றார் பாஸ்வான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...