மம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ

ஒருகட்டத்தில் மமதா பானர்ஜியின் வலதுகரமாக திகழ்ந்த வரும், நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாஜகவிற்கு மகத்தான வெற்றியை தேடித்தந்ததில் முக்கிய பங்காற்றிய வருமான முகுல்ராயின் மகன், சுப்ரன்ஷூ ராயை 6 ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்வதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்முடிவில் மேற்குவங்காளத்தில் இரண்டாவது கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, 40க்கும் அதிகமான வாக்கு சதவீதத்துடன் 18 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியுள்ளது. கடந்தமுறை வெறும் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பாஜக, அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சிவைத்தியம் அளித்து மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

தோல்வியால் துவண்டு போயிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைமையை மேலும் உசுப்பிவிடும் வகையில் அக்கட்சியின் பிஜ்பூர் தொகுதி எம்.எல்.ஏவான சுப்ரன்ஷூராய் பாஜகவை போற்றும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக பக்கம் சாய்ந்த முன்னாள் எம்.பி முகுல் ராயின் மகன் ஆவார்.

“எனது தந்தையை நினைத்து பெருமை யடைகிறேன். அவர் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகியபோது, லட்சக் கணக்கான முகுல் ராய்களை எங்களால் உருவாக்க முடியும் என கேலி செய்தார்கள், ஆனால் திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கிய அதே கைகளால் அவர் இன்று கட்சியை உடைத்தெறிந்துவிட்டார். ஒட்டுமொத்த மாநிலத்திலும் சாணக்கியராக வலம் வருகிறார்” என்றார் சுப்ரன்ஷூ.

மேலும் 12 தொகுதிகளை இழந்திருப்பது சாதாரணமானது அல்ல, திரிணாமுல் காங்கிரஸ் இதுகுறித்து செவிசாய்க்க வேண்டும் என்றும் சுப்ரன்ஷூ குறிப்பிட்டார்.

பிஜ்பூர் தொகுதியின் மண்ணின் மைந்தன் நான், அதேபோல தான் என் தந்தையும், என் தந்தையிடம் நான் தோல்வியடைந்துள்ளேன். நான் என்னால் முடிந்ததை கட்சிக்காக முயற்சித்தேன், இருப்பினும் மக்கள் என் தந்தையை தேர்ந்தெடுத்து விட்டனர் என சுப்ரன்ஷூ கூறினார்.

 

இதுகுறித்து பேசிய அவர், என்னால் இனி நிம்மதியாக மூச்சுவிட முடியும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்பலர் மூச்சுத் திணறலில் உள்ளனர். என்னைப் போலவே பலரும் பிஜேபியில் சேர்வர், என்று கூறி இருக்கிறார். என் மீது ஜோடிக்கப் பட்ட குற்றவழக்குகள் போட வாய்ப்புள்ளது அல்லது என்மீது தாக்குதல் கூட நடத்தப்படலாம் என என் தந்தை எச்சரித்துள்ளார். இதனால் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பிஜேபியில் இணைய உள்ளேன். எனக்கு இந்தகட்சியில் உரியமரியாதை இல்லை. அதனால் புதிய இன்னிங்ஸை தொடங்க இருக்கிறேன். தற்போது மேற்கு வங்காளத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதைமட்டும் விரும்புகிறே என்றார்  .

இவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் சிலர் சேர உள்ளதாக தெரிகிறது.

One response to “மம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...