நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்வெற்றி பெற்றது. பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். கடந்த மோடி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக மேனகா காந்தி நியமிக்கப்பட்டிருந்தார். இந்தமுறையும் அவர் அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு விபிசிங், வாஜ்பாய் அமைச்சரவையிலும் மத்திய அமைச்சராக செயல்பட்டிருக்கிறார்.
ஆனால், இந்தமுறை மேனகா காந்தி மத்திய அமைச்சராக நியமிக்கப்படவில்லை. உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட அவர், சபாநாயகராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சபையில் நீண்டகாலம் அனுபவம் உள்ளவர்களை சபாநாயகராக நியமிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் 8 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ள மேனகா, சபாநாயகராக நியமிக்கபட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் பதவியை கருத்தில் கொண்டுதான் மேனகாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வில்லை என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மேனகா காந்தி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டால், மீராகுமார், சுமத்ராமகாஜன் ஆகியோருக்கு பிறகு மூன்றாவது பெண் சபாநாயகர் என்ற பெயரை மேனகாகாந்தி எடுப்பார். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஒருபெண் சபாநாயகராகப் பதவியேற்ற பெருமையும் கிடைக்கும்.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |