வங்கிகளின் வாராக் கடன் குறைந்தது

வங்கிகளின் வாராக் கடன் கடந்த நிதியாண்டை விட ரூ.1.02 லட்சம் கோடி குறைந்து ரூ. 9.34 லட்சம் கோடியாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

வங்கிகளின் வாராக்கடன் நிலை குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு நிர்மலா சீதாராமன் எழுத்துப் பூர்வமாக செவ்வாய்க் கிழமை பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அளவை குறைப்பதற்காக, பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அளித்தது, நிதி மோசடியாளர்கள் மீண்டும் கடன்வாங்காத வகையில் தடை விதித்தது, கடன் வழங்குபவர் மற்றும் பெறுபவர் இடையேயான உறவில் மாற்றங்கள் கொண்டுவந்தது, திவாலான நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் அடங்கிய தகவல்கள்களை சேகரிக்கும்வகையில் மத்திய நிதி மோசடியாளர்கள் ஆவணம்’ பராமரிக்கப் படுகிறது. அதில் உள்ள தகவல்கள் அவ்வப்போது வங்கிகளுக்கு அனுப்பப்படும். அதன்மூலம் நிதிமோசடியில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் கடன் வழங்குவது தடுக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக் கடன் அளவு குறைந்துள்ளது. ரிசர்வ்வங்கி அளித்த தரவின்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி, வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு ரூ.10.36 லட்சம் கோடியாக புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், வாராக் கடன் அளவு ரூ. 1.02 லட்சம் கோடி குறைந்து ரூ. 9.34 லட்சம் கோடியாக தற்போது உள்ளது.ரூ. 50 கோடிக்கு மேல் கடன்வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது, நிதி மோசடியாளர்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ. 4.01 லட்சம் கோடி வாராக்கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளன.

ரூ. 250 கோடிக்கு அதிகமாக கடன்பெறும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாராக்கடனை வசூலிப்பதற்காக, ஒருமுறை தீர்வு’ திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடன்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுகின்றன.

கடந்த 2018-19 நிதியாண்டில் அதிகளவில் மோசடி நடைபெற்ற வங்கிகள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து கோட்டக் மகிந்திரா வங்கியும், அதைத்தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட்வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...