வங்கிகளின் வாராக் கடன் குறைந்தது

வங்கிகளின் வாராக் கடன் கடந்த நிதியாண்டை விட ரூ.1.02 லட்சம் கோடி குறைந்து ரூ. 9.34 லட்சம் கோடியாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

வங்கிகளின் வாராக்கடன் நிலை குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு நிர்மலா சீதாராமன் எழுத்துப் பூர்வமாக செவ்வாய்க் கிழமை பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அளவை குறைப்பதற்காக, பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அளித்தது, நிதி மோசடியாளர்கள் மீண்டும் கடன்வாங்காத வகையில் தடை விதித்தது, கடன் வழங்குபவர் மற்றும் பெறுபவர் இடையேயான உறவில் மாற்றங்கள் கொண்டுவந்தது, திவாலான நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் அடங்கிய தகவல்கள்களை சேகரிக்கும்வகையில் மத்திய நிதி மோசடியாளர்கள் ஆவணம்’ பராமரிக்கப் படுகிறது. அதில் உள்ள தகவல்கள் அவ்வப்போது வங்கிகளுக்கு அனுப்பப்படும். அதன்மூலம் நிதிமோசடியில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் கடன் வழங்குவது தடுக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக் கடன் அளவு குறைந்துள்ளது. ரிசர்வ்வங்கி அளித்த தரவின்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி, வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு ரூ.10.36 லட்சம் கோடியாக புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், வாராக் கடன் அளவு ரூ. 1.02 லட்சம் கோடி குறைந்து ரூ. 9.34 லட்சம் கோடியாக தற்போது உள்ளது.ரூ. 50 கோடிக்கு மேல் கடன்வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது, நிதி மோசடியாளர்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ. 4.01 லட்சம் கோடி வாராக்கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளன.

ரூ. 250 கோடிக்கு அதிகமாக கடன்பெறும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாராக்கடனை வசூலிப்பதற்காக, ஒருமுறை தீர்வு’ திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடன்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுகின்றன.

கடந்த 2018-19 நிதியாண்டில் அதிகளவில் மோசடி நடைபெற்ற வங்கிகள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து கோட்டக் மகிந்திரா வங்கியும், அதைத்தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட்வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...