அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றுவருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜாவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்யநாயுடு, அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது; அரசியலில் இருந்து ஓய்வுபெற்றாலும், பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஆந்திராவுக்கு வாஜ்பாயின் வருகையை சுவரில் எழுதியவன் வாஜ்பாயின் அருகில் கட்சித் தலைவராக அமர்ந்தேன். சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பிறகு உலகநாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றன. குடியரசு துணைத்தலைவர் ஆக வேண்டும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை.

குடியரசு துணைத் தலைவராக என்னை தேர்ந்தெடுத்த போது நான் கண்ணீர் விட்டேன். மத்திய அமைச்சர் பதவியை இழந்ததால் நான் கண்ணீர் விடவில்லை. விவசாயியின் மகனான நான் நாட்டின் உயர்ந்த பதவியில் அமர்வதை எண்ணி கண்ணீர் விட்டேன். குடியரசு துணைத்தலைவர் ஆனதால் இனிமேல் பாஜக கட்சி அலுவத்திற்கு செல்ல முடியாது என வருந்தினேன். குடியரசு துணைத்தலைவர் பதவியில் அமர்ந்ததும் கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து விலகினேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...