அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றுவருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜாவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்யநாயுடு, அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது; அரசியலில் இருந்து ஓய்வுபெற்றாலும், பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஆந்திராவுக்கு வாஜ்பாயின் வருகையை சுவரில் எழுதியவன் வாஜ்பாயின் அருகில் கட்சித் தலைவராக அமர்ந்தேன். சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பிறகு உலகநாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றன. குடியரசு துணைத்தலைவர் ஆக வேண்டும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை.

குடியரசு துணைத் தலைவராக என்னை தேர்ந்தெடுத்த போது நான் கண்ணீர் விட்டேன். மத்திய அமைச்சர் பதவியை இழந்ததால் நான் கண்ணீர் விடவில்லை. விவசாயியின் மகனான நான் நாட்டின் உயர்ந்த பதவியில் அமர்வதை எண்ணி கண்ணீர் விட்டேன். குடியரசு துணைத்தலைவர் ஆனதால் இனிமேல் பாஜக கட்சி அலுவத்திற்கு செல்ல முடியாது என வருந்தினேன். குடியரசு துணைத்தலைவர் பதவியில் அமர்ந்ததும் கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து விலகினேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...