பாஜக.,வின் இளம் ஊழியர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் சுஷ்மா

மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் நினைவாக டெல்லியில் இன்று நடந்த இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது, “சுஷ்மா சுவராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளிலும் தன்னால் முடிந்தளவிற்கு சிறப்பாக செயல்பட்டார். தனது தனிப்பட்ட வாழ்விலும் நிறையசாதித்துள்ள அவர் பாரதீய ஜனதா கட்சியில் இருக்கும் இளம் ஊழியர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாவார்.

சுஷ்மா ஸ்வராஜ் தனது சொந்தவாழ்க்கையில் நிறைய சாதித்த போதிலும், எந்த பணியைக் கொடுத்தாலும் அதற்கு தன்னையை அர்ப்பணிப்பார். பாஜக இளம்தொண்டர்களுக்கு அவரைக் காட்டிலும் பெரிய உத்வேகம் இருக்கமுடியாது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பிரச்னைகளை தனது சொந்தப் பிரச்னைகளாக நினைத்துக் கொள்வார். வெளியுறவு அமைச்சகத்தின் குணத்தையே அவர் முற்றிலுமாக மாற்றினார். கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் 77 பாஸ்போர்ட் அலுவலகங்கள் இருந்தது. அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில், தற்போது இந்தியாவில் 505 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளது. இதிலிருந்தே அவரதுபணியின் வீரியத்தை நாம் உணரலாம்.

ஐ.நா சபையில் நான் எனது முதல்உரையை நிகழ்த்துவதற்குத் தயாராக இருந்தேன். அவர், என்னுடைய உரை எங்கே என்றுகேட்டார். நான் எழுதிக்கொள்ளாமலே உரையாற்றுவேன் என்று அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் அதை கடுமையாக எதிர்த்தார். இதையடுத்து, அவருடன் இணைந்து முந்தைய நாள் இரவு உரையைத் தயார்செய்தோம்.

பின்னர் அவர் என்னிடம் தெரிவித்தார், நீங்கள் எவ்வளவு பெரியபேச்சாளராக வேண்டுமானாலும் இருக்கலாம், அவைகளுக்கு என்று ஒரு சில நல்லொழுக்கங்கள் உள்ளது. அதற்கான பயிற்சிகள் மிகமுக்கியம் என்றார். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் இது”

பாஜகவின் மூத்த தலைவரும் மத்தியவெளியுறவு முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய மறைவையொட்டி தில்லியில் இரங்கல்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது,

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...