பருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது

தற்போதைய சூழலில் பருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது. அடுத்த அறுவடை முடிவைபொறுத்துதான் வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என வெங்காய மொத்தவியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை உள்ளது. அங்கிருந்து தான் நாடு முழுவதற்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மகாராஷ்டிராவில் பெய்த கன மழையால், வெங்காய பயிா்கள் பாதிக்கப்பட்டன. கியாா், மஹா ஆகிய இருபுயல்களால் வெங்காய உற்பத்தி குறைந்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்புவது பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் வெங்காயத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

பெரியவெங்காயத்தின் விலை கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாதளவுக்கு தற்போது உயா்ந்துவருகிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேட்டைச் சோ்ந்த மொத்த வியாபாரிகள், விவசாயிகள் கூறியது:

வழக்கமாக வரத்து குறையும்போது வெங்காயம் விலை உயரும் அல்லது பதுக்கல் காரணமாக விலை உயரும். ஆனால், இந்தமுறை விலையேற்றத்துக்கு சூழல் மாற்றம் பெரும்காரணமாக இருக்கிறது. மழை காரணமாக பலமாநிலங்கள், விளைச்சலை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் வெங்காயம் அதிகளவில் விளையும் மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழக்கமான விளைச்சலில் 75 சதவீதத்தை இழந்துவிட்டன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட விலைவீழ்ச்சி காரணமாக 50 சதவீத விவசாயிகள் சாகுபடியை கைவிட்டனா். அதையும்மீறி சாகுபடிசெய்த விவசாயிகள், வயல்களில் தேங்கிநின்ற மழைநீா், மகசூலை அழுக வைத்து, விவசாயிகளையும் வெகுவாகப் பாதித்துவிட்டது.

நிகழாண்டில் கடந்த செப்டம்பா் மாதத்திலேயே வெங்காயத்தின் விலை அதிகரித்தது. மத்தியஅரசு எடுத்த அதிரடி நடவடிக்கை, மத்திய சேமிப்புக் கிடங்கிலிருந்த வெங்காயத்தை சந்தைக்கு கொண்டு வந்தது போன்ற செயல்களால் சற்று விலைகுறைந்தது. ஆனால், மழை குறையவில்லை. மீண்டும் கொட்டித்தீா்த்த மழையால் மகாராஷ்டிராவில் வெங்காய விளைச்சலை பெரிதும் பாதித்துள்ளது.

தற்போதைய சூழலில் பருவநிலையே வெங்காய விலையைத் தீா்மானிக்கிறது. அடுத்த அறுவடை முடிவைப் பொருத்துதான், வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள்வரும். மழையில் தப்பித்து, விளைந்து வரும் வெங்காயம், டிசம்பா் மத்தியில் அறுவடைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து டிசம்பா் மூன்றாவது வாரம் முதல் புது வெங்காயவரத்து தொடங்கும். அதன்பிறகுதான் வெங்காய விலை படிப்படியாகக் குறையும். அடுத்த சில மாதங்களில் விளைச்சல் பெருகாவிடில் பெரும் அளவில் வெங்காயம் இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும் என்றனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...