இந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்த எதிர்காலம்

அண்டை நாடுகளில், துன்புறுத்தலுக்கு ஆளாகிவரும் இந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி தருவோம்,” என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர், டில்லியில், ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையின் நிகழ்ச்சியில் பேசியதாவது: தாய்நாடு மீது பக்திகொண்ட நுாற்றுக்கணக்கான இந்தியர்கள், அண்டை நாடுகளில் துன்பத்தில் உழன்று வருகின்றனர். அவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கி வளமான எதிர்காலம் அமைத்து தர உள்ளோம். இதற்காக, குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை பார்லி., யில் நிறைவேற்றும் பணி துவங்கியுள்ளது.ராமஜென்ம பூமி வழக்கில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன், ‘நாட்டின் அமைதி சீர்குலையும்’ என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால், அது தவறு என்பதை மக்கள் நிருபித்துவிட்டனர். ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியல் சாசனசட்டம், 370வது பிரிவை நீக்கியது, அரசியல் ரீதியாக கடினமான முடிவுதான். ஆனால், அது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களிடம், முன்னேற்றத்திற்கான புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. அரசு, நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்கு, முக்கிய பிரச்னைகளில் கவனம்செலுத்தும்.

நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளோம். ஒருகாலத்தில், வங்கிகள் தேசியமய மாக்கப்பட்ட போது, பத்திரிகைகள் பாராட்டி, கட்டுரைகளை வெளியிட்டன. அந்தவங்கிகளை தற்போது துணிவுடன் ஒன்றிணைத்து வருகிறோம். வங்கித்துறை பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.நாங்கள், முந்தைய அரசு போல, வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில்லை.

இலக்கு நிர்ணயித்து, செயல்பாட்டில் கவனம்செலுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். விரைவில் தாக்கல்அண்டை நாடுகளான, பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு, இந்தியகுடியுரிமை அளிக்கப்பட உள்ளது. இதற்கான, குடியுரிமை சட்டதிருத்த மசோதா, நடப்பு, பார்லி., கூட்டத் தொடரில் தாக்கல்செய்யப்பட உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...