கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அபாரவெற்றி

கர்நாடக சட்ட சபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக. சார்பில் 13 தொகுதிகளில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும், ராணிபென்னூரில் அருண்குமார் புஜார், சிவாஜிநகரில் எம்.சரவணா ஆகியோரும் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் சார்பில் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டனர். இதில் முக்கியமாக ராணிபென்னூரில் முன்னாள் சபாநாயகர் கே.பி.கோலிவாட் போட்டியிட்டார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் 12 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 2 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் கடைசிநேரத்தில் மனுவை வாபஸ் பெற்றனர். ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடாவுக்கு அக்கட்சி ஆதரவுவழங்கியது. இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் 165 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்த இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 11 இடங்களில் பலத்தபாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்துவந்தது.
இந்நிலையில்,  கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றி பாஜக. அபாரவெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேட்சை ஒருதொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
15 தொகுதிகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றால்தான் பா.ஜ.க. ஆட்சியையும், முதல்-மந்திரி பதவியையும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பாவின் ஆட்சி தப்பியது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எடியூரப்பா அரசு அதிகபட்சமாக 12 தொகுதிகளில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.