மதத்தின் அடிப்படையிலா நாங்கள் திட்டங்களை அமல் படுத்துகிறோம்?

“வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பு’ இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் சிசிஏ, என்ஆர்சியால் பாதிக்கப்பட மாட்டார்கள். “நாடுமுழுவதும் என்ஆர்சியை அமல்படுத்தி இந்திய முஸ்லிம்களைத் தடுப்புக்காவல் முகாம்களுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிடுகிறது’ என தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்பிவருகிறது. வேறு சில எதிர்க் கட்சிகளுடனும், “நகர்ப்புற நக்சல்’களுடனும் இணைந்து இச்செயலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. என்ஆர்சியை நாடுமுழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்திலோ, அமைச்சரவைக் கூட்டத்திலோ இன்னும் விவாதிக்கக் கூட இல்லை.

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்புபவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இச்சட்டத்துக்கு எதிராகப்போராடும் மக்கள், அதனை முழுமையாக வாசித்து புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். சட்டத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால், எதிர் கட்சிகளின் சதிவலையில் மக்கள் சிக்க மாட்டார்கள். ஆண்டாண்டு காலமாக வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் கட்சி தற்போது இந்த விவகாரத்தில் நாட்டுமக்களை பிரிக்கப் பார்க்கிறது. நாட்டை ஒன்றிணைக்கும் பணியில்தான் நான் ஈடுபட்டுள்ளேன். நாட்டைப்பிரிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை நான் அனுமதிக்க மாட்டேன்.

அகதிகளுக்கும் ஊடுருவல் காரர்களுக்கும் வித்தியாசம் உண்டு. ஊடுருவல் காரர்கள் தங்கள் அடையாளத்தை ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால், அகதிகளோ தங்கள் அடையாளத்தை ஒருபோதும் மறைக்க மாட்டார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் ஆகியோர் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக முன்பு பேசியுள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, மக்களுக்கு உறுதி அளித்திருந்தது. இதைத் தான் நாங்கள் இப்போது நிறைவேற்றியுள்ளோம். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு முன்பு ஆதரவு அளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தற்போது வாக்குவங்கி அரசியலுக்காக தனது நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

பலஇஸ்லாமிய நாடுகள் என்னைக் கௌரவித்துள்ளன. உலக நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் என்னை ஆதரித்தால், இந்திய முஸ்லிம்களை எனக்கு எதிராக எப்படித் திருப்பமுடியும் என காங்கிரஸ் கட்சி பயப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக எனக்கு எதிராக பலமுயற்சிகளை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டன. ஆனால், அவை பலனளிக்க வில்லை. எதிர் காலத்திலும் பலனளிக்காது.

ஏழைகளுக்காக மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தும்போது, அவர்கள் கோயிலுக்குப் போகிறார்களா அல்லது மசூதிக்குப் போகிறார்களா எனப் பார்த்து நாங்கள் திட்டங்களை அமல்படுத்துவதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1.5 கோடி வீடுகளை ஏழைகளுக்கு கட்டிக் கொடுத்துள்ளோம்.

மதத்தின் அடிப்படையிலா வீடுகளைக் கட்டிக் கொடுத்தோம்? தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் வசிப்பவர்களுக்கு சொத்துரிமை பத்திரம் வழங்க மத்திய அரசு முடிவெடுத்த போது, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டோமா? எனது பணிகளில் வேற்றுமை இருந்தால் அதைப் பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சிகளுக்கு நான் பகிரங்க சவால் விடுகிறேன். நாடாளுமன்றத்தையும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசையும் மதிக்குமாறு எதிர்க்கட்சிகளை நான் கேட்டுக் கொள்கிறேன்.

“குடியுரிமை திருத்த சட்டம் மோடியின் திட்டம் அல்ல; மகாத்மா காந்தியின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டே இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பும்போது, அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்று காந்திஜி கூறியிருந்தார். “காந்தி’ என்ற பெயரைக் கொண்டுள்ளவர்கள் குறைந்தபட்சமாவது காந்திஜியை பின்பற்ற வேண்டும். சில மாநிலங்களின் முதல்வர்கள் தங்களது மாநிலங்களில் சிஏஏவை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். நீங்கள் (முதல்வர்கள்) கூறுவது உண்மையிலேயே சாத்தியமாகுமா என்று உங்களது சட்டநிபுணர்களிடம் கேளுங்கள்’.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக சுமார் 33 ஆயிரம் போலீஸார் தங்கள் வாழ்வைத்தியாகம் செய்துள்ளனர். இன்று போராட்டக் காரர்களால், போலீஸார் கொடூரமாகத் தாக்கப் படுகிறார்கள். மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், எந்த போலீஸும் உங்களின் மதம் என்ன, ஜாதி என்ன என கேட்பதில்லை.

வெயில், மழை, புயல், இரவு, பகல் என எப்போது அழைத்தாலும் அவர்கள் உங்களுக்காக ஓடோடி வருகிறார்கள். கோபம்இருந்தால், எனது உருவ பொம்மையை எரியுங்கள். ஆனால், காவலர்களைத் தாக்காதீர்கள். பொதுச் சொத்துகளையும், ஏழைகளின் சொத்துகளையும் சேதப்படுத்தாதீர்கள்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது. 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...