5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றாலும் இயலாதது அல்ல

நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில் பொருளாதாரம் மிக வீழ்ச்சிகண்டு வருவது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. ஒருபுறம் இந்த வீழ்ச்சியினால் அடுத்து வரும் காலாண்டுகளிலும் வீழ்ச்சி காணும், இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் $5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைவது கஷ்டம்தான் என்று பல நிபுணர்கள் கூறிவந்தனர்.

இந்த நிலையில் மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மத்திய அரசின் $5 டிரில்லியன் இலக்கை அடைவது கஷ்டம்தான். ஆனால் சாத்தியமற்றது அல்ல என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம் இந்தூர் நிர்வாகத்தின் 29வது சர்வதேசமேலாண்மை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நிதின் கட்கரி, அங்கு பேசுகையில், 2024ம் ஆண்டில் இந்தியாவைப் 5 டிரில்லியன் டாலர் இலக்குகொண்ட பொருளாதாரத்தை அடைவது கஷ்டம்தான். ஆனால் சாத்தியமற்றதல்ல.

எந்தவொரு வலுவான இலக்கினையும் அடைய வலுவான அரசியல்விருப்பம் மிக முக்கியம். அதனை வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி $5 டிரில்லியன் இலக்கை அடைய இலக்கு வைத்துள்ளார். இந்தஇலக்கை அடைவது கடினம் தான். ஆனால் சாத்தியமற்றதல்ல

நம் நாட்டில் ஏராள மான வளங்களும் உற்பத்தி திறனும் உள்ளன. இருந்தாலும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை இறக்குமதிசெய்வதிலும், நிலக்கரி, காப்பர், காகிதங்கள் உள்ளிட்ட பலபொருட்களை இறக்குமதிசெய்ய கோடிகணக்கில் செலவு செய்கிறோம்.

நாம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய விரும்பினால் அதிகளவில் இறக்குமதி செய்வதை தவிர்த்து, அதற்குபதிலாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

நாங்கள் உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். ஆனால் தற்போது வணிகத்தில் ஒருசுழற்சி உள்ளது. மேலும் விவசாயத்திலும் சவாலான நிலை உள்ளது. மேலும் சர்வதேச பொருளாதாரத்தில் நிலவிவரும் மந்த நிலை காரணமாகவும், தேவைமந்தம் காரணமாகவும் மந்த நிலை நிலவி வருகிறது.

எனினும் நாட்டில் நிலவிவரும் மந்தநிலை ஒருபுறம் இருந்தாலும், நாட்டில் நிலவி வரும் சிரமங்களையும், சில சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றக்கூடிய இளைய தலைமுறையினரின் தலைவர்களில் இந்தியாவின் எதிர் காலத்தை நான் காண்கிறேன்.

நாட்டில் மூலதனம் மற்றும் வளங்கள், தொழில் நுட்பத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் நிச்சயமாக பல்வேறு துறைகளில் சரியான பார்வை மற்றும் தலைமை இல்லை  சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதன் மூலம் ஏற்றுமதிகள் ஆதரிக்கப்படும்.

இந்த முயற்சியானது ஐந்துகோடி புதிய வேலைகளை உருவாக்க உதவும், இது 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய ஒவ்வொரு துறையும், பங்கு அளிக்கசெய்ய முடியும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...