இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து போராட உயர்மட்ட குழு

இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கான ஆயத்தங்களை மேற்பார்வைசெய்வதற்கும், கண்காணிப்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு உயர்மட்ட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தகுழு நேற்று, முதல் முறையாக ஆய்வுபணிகளில் ஈடுபட்டனர். இந்தியாவில் 3 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், சிவில்விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே மற்றும் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் மனுஷ்க் லால் மண்டாவியா ஆகியோர் இந்தகுழுவில் உள்ளனர்.

பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பிகே. மிஸ்ராவும் தனியாக, கொரோனா வைரஸ் தொடர்பான நிலைமை மற்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வுஹானில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட 600 க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு செய்யப் பட்டுள்ள மருத்துவ ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

கேரளாவில் உள்ள மூன்று இந்தியர்கள் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் தான், கேரளாவில் பதிவான மூன்று பாதிப்புகள் குறித்தும், உயர்மட்ட அமைச்சரவை குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பிறநடவடிக்கைகள் அப்போது ஆலோசிக்கப்பட்டன.

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஏற்கனவே கொரோனா வைரஸை உலகசுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் சீனாவில் இதுவரை 350 க்கும் மேற்பட்ட உயிர்களை கொன்றுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...