மாநிலங்களவை தேர்தல் ; 12-13 இடங்களை பிடிக்கும் பாஜக

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிகாலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.
 காலியாகவுள்ள 55 இடங்களுக்கு வரும் 26 ஆம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்ததேர்தலில் போட்டியிட வரும் 6 ஆம் தேதியில் இருந்து வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.  13 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.  மக்களவையில் 303 உறுப்பினர்களை கொண்டு தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ள போதிலும், மாநிலங்களவையில் கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை. இதனால், முக்கியமசோதாக்கள்  நிறைவேற கூட்டணி கட்சிகளை நம்பி அந்தக் கட்சி உள்ளது.
இந்த நிலையில், வரும் 26 ம் தேதி நடைபெற உள்ள  மாநிலங்களவை தேர்தலில் தங்கள்கட்சிக்கு 12-13 இடங்கள் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.  இதன் மூலம், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 94-95 ஆக உயரும்.  வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அடுத்தசுற்று தேர்தலில், பாஜகவின் பலம் மேலும் அதிகரிக்கும். ஏனெனில் உத்தர பிரதேசத்தில்  அக்கட்சிக்கு அதிக எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.  இருந்தபோதிலும், பாஜகவால் மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மை பெறுவது கடினமான ஒன்றாக பார்க்க தோன்றுகிறது.
வரும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் பிறபிராந்திய கட்சிகளை பொருத்தவரை திமுக, அதிமுக தலா 3 இடங்களை கைப்பற்ற உள்ளது. ஜேடியூ, பிஜேடி மற்றும் ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 5 இடங்களையும்,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 4 மற்றும் டி.ஆர்.எஸ் 1 இடத்தையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கபடுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.