கரோனா வைரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

கரோனா வைரஸ்தொற்று குறித்து இந்திய மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலி சென்றுதிரும்பிய தில்லி நபருக்கும், துபாய்சென்று திரும்பிய தெலங்கானாவைச் சேர்ந்தவருக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த நிலையில் தில்லி நபரின் குடும்பத்தினருக்கும் கரோனா அறிகுறி இருப்பதால் அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது, சில சின்னச்சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அத்துடன், கைகளை அடிக்கடி கழுவுங்கள், கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு, வாயைத்தொட வேண்டாம், வெளியிடங்களில் கவனமாக இருங்கள் என்று போஸ்டரையும் இணைத்துள்ளார்.

மேலும், கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துகொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கபட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் மக்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது முதல் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்வதுவரை பல்வேறு துறை அமைச்சகங்கள், மாநிலங்கள் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...