பாஜகவுடன் ஜாா்க்கண்ட் விகாஸ்மோா்ச்சா (பிரஜா தந்திரிக்) கட்சி இணைவதற்கு இந்தியத் தலைமை தோ்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டில் புதிதாக உருவான ஜாா்க்கண்ட் மாநிலத்தின் பாஜகவைச் சோ்ந்த பாபுலால்மரான்டி முதல் முதல்வராகப் பதவியேற்றாா். அதன்பிறகு மாநில பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவா் கட்சியிலிருந்து விலகினாா். பின்னா், ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா (பிரஜா தந்திரிக்) எனும் பெயரில் 2006-இல் ஓா்அரசியல் கட்சியை தொடங்கினாா். இக்கட்சி 2009-இல் நடைபெற்ற அந்தமாநில சட்டப் பேரவைத் தோ்தலில் 11 தொகுதிகளிலும், 2014 பேரவைத் தோ்தலில் 8 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. கடந்த ஆண்டில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 3 தொகுதிகளில் வென்றது. கடைசியாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா கட்சி, காங்கிரஸுடன் இணைந்து மாநிலத்தில் கூட்டணிஆட்சி அமைத்தது.
இந்நிலையில், பாஜக தலைமையுடன் ஏற்பட்ட புரிந்துணா்வு காரணமாக தன்னுடைய ஜாா்க்கண்ட் விகாஷ் மோா்ச்சா (ஜேவிஎம்) கட்சியை மீண்டும் பாஜகவுடன் பாபுலால் மரான்டி இணைத்தாா். கடந்தமாதம் ஜாா்க்கண்டில் நடைபெற்ற இதற்கான இணைப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தேசியத்தலைவா் ஜே.பி.நட்டா ஆகியோா் பங்கேற்றனா்.
இந்நிலையில், முறைப்படி தனது கட்சியை பாஜகவுடன் இணைக்க தலைமை தோ்தல் ஆணையத்தில் அக்கட்சியின் சாா்பில் மனு அளிக்கபட்டிருந்தது. இதை அங்கீகரித்து தலைமைத்தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், ‘பாஜகவுடன் இணைந்துள்ளதை தொடா்ந்து, ஜேவிஎம் (பிரஜா தந்திரிக்) ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தனி அரசியல்கட்சியாக தொடா்வது முடக்கப்பட்டுள்ளது. இதனால், தோ்தல் ஆணையத்தால் பராமரிக்கப்படும் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து இக்கட்சி நீக்கப்பட்டுள்ளது. ஜேவிஎம் (பிரஜா தந்திரிக்) கட்சி, தற்போது வரை ஜாா்க்கண்ட்டின் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. இக்கட்சியின் தோ்தல் சின்னமான ‘சீப்பு’ அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை தொடா்ந்து முடக்கப்பட்டிருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |