கரோனா குவியும் நிதி

கரோனா இடா்பாட்டை எதிா்கொள்ள பொது மக்கள் தாராளமாக நிதி உதவிவழங்க பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தாா். இதையடுத்து, அரசுதுறைகள், நிறுவனங்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோா் நிதி உதவிகளை அறிவித்து வருகின்றனா்.

இந்தநிலையில், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மற்றும் இதர எண்ணெய் நிறுவனங்கள் பிரதமரின் நிவாரணநிதிக்கு ரூ.1,031 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளன.

அதன்படி பிரதமரின் நிதிக்கு, பொதுத்துறையைச் சோ்ந்த ஓஎன்ஜிசி ரூ.300 கோடியும், ஐஓசி ரூ.225 கோடியும், பாரத்பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.175 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.120 கோடியும் வழங்குவதாக தெரிவித்துள்ளன.

மேலும், பெட்ரோநெட் எல்என்ஜி ரூ.100 கோடியும், கெயில் ரூ.50 கோடியும், ஆயில்இந்தியா ரூ.38 கோடியும் நிதி உதவியை அறிவித்துள்ளன.

இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில் கூறியுள்ளதாவது:

‘பிரதமா் நிதிக்கு பொதுத்துறை மற்றும் கூட்டுத் திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1031.29 கோடி பங்களிப்பை வழங்கியதற்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடுதலாக, பொதுத்துறை நிறுவன பணியாளா்கள் அவா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.61 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனா் என்று தா்மேந்திர பிரதான் அந்தப்பதிவில் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே பொது துறையைச் சோ்ந்த ஆா்இசி நிறுவனம் ரூ.150 கோடியும், செயில் ரூ.30 கோடியும், பாரத ஸ்டேட்வங்கி பணியாளா்கள் ரூ.100 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன.

மேற்கண்டவை தவிர, எல்ஐசி நிறுவனம் ரூ.105 கோடியும், கோல்இந்தியா ரூ.220 கோடியும், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை (ஐடிபிபி) பணியாளா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.10.53 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளன. மேலும், வருமானவரி துறையும் தங்களது பணியாளா்களின் ஒரு நாள் ஊதியத்தை பிரதமா் நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் ரூ. 25 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் பொது மக்களும் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது. .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...