கரோனா குவியும் நிதி

கரோனா இடா்பாட்டை எதிா்கொள்ள பொது மக்கள் தாராளமாக நிதி உதவிவழங்க பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தாா். இதையடுத்து, அரசுதுறைகள், நிறுவனங்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோா் நிதி உதவிகளை அறிவித்து வருகின்றனா்.

இந்தநிலையில், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மற்றும் இதர எண்ணெய் நிறுவனங்கள் பிரதமரின் நிவாரணநிதிக்கு ரூ.1,031 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளன.

அதன்படி பிரதமரின் நிதிக்கு, பொதுத்துறையைச் சோ்ந்த ஓஎன்ஜிசி ரூ.300 கோடியும், ஐஓசி ரூ.225 கோடியும், பாரத்பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.175 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.120 கோடியும் வழங்குவதாக தெரிவித்துள்ளன.

மேலும், பெட்ரோநெட் எல்என்ஜி ரூ.100 கோடியும், கெயில் ரூ.50 கோடியும், ஆயில்இந்தியா ரூ.38 கோடியும் நிதி உதவியை அறிவித்துள்ளன.

இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில் கூறியுள்ளதாவது:

‘பிரதமா் நிதிக்கு பொதுத்துறை மற்றும் கூட்டுத் திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1031.29 கோடி பங்களிப்பை வழங்கியதற்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடுதலாக, பொதுத்துறை நிறுவன பணியாளா்கள் அவா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.61 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனா் என்று தா்மேந்திர பிரதான் அந்தப்பதிவில் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே பொது துறையைச் சோ்ந்த ஆா்இசி நிறுவனம் ரூ.150 கோடியும், செயில் ரூ.30 கோடியும், பாரத ஸ்டேட்வங்கி பணியாளா்கள் ரூ.100 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன.

மேற்கண்டவை தவிர, எல்ஐசி நிறுவனம் ரூ.105 கோடியும், கோல்இந்தியா ரூ.220 கோடியும், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை (ஐடிபிபி) பணியாளா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.10.53 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளன. மேலும், வருமானவரி துறையும் தங்களது பணியாளா்களின் ஒரு நாள் ஊதியத்தை பிரதமா் நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் ரூ. 25 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் பொது மக்களும் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது. .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...