உத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி

கரோனா வைரஸ் பரவாமல்தடுப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ்தாக்கரே கூறிய பரிந்துரையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது எப்படி, டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்களின் தப்லீக்ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை தனிமைப் படுத்தி கண்காணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்கள், மருந்துப்பொருட்கள் கையிருப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி ஊரடங்கு தற்போது அமலில் உள்ள நிலையில் அதன்பிறகு நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விவாதித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உத்தவ்தாக்கரே பேசுகையில் ‘‘ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள மதத்தலைவர்களுடன் பேச வேண்டும். மதத் தலைவர்கள் தங்கள் சமூகமக்களிடம் சமூக விலக்கலை மக்கள் சரியாக முறையில் பின்பற்றுமாறு அறிவுரை வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்ள வேண்டும், அதுபோலவே மதக் கூட்டங்களை தவிர்க்கவேண்டும் என கேட்டுக் கொள்ள வேண்டும்’’ என பரிந்துரைத்தார்.

பிரதமர் மோடி உடனடியாக இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். இதுபோலேவே ஊடரங்கு காரணமாக வீட்டுக்குள் இருக்கும் மக்கள் உடல்நலம் மட்டுமின்றி மனநலத்துடன் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தவ்தாக்கரே பரிந்துரைத்தார். இதையும் ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி பரிந்துரைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...