இந்த தேசத்துக்கென்று ஒரு ஆன்ம உண்டு

இந்தியாவில் போதுமான அளவில் டெஸ்ட்கள் செய்யப்படவில்லை..அதனால்தான் சீன வைரஸ் தொற்று குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது என ஒரு கும்பல் கதறிக்கொண்டே இருந்தது..

அதாவது நிறையப்பேருக்கு சோதனை செய்தால் , பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயரும் என்று சொன்னார்கள்..ஆகா..மக்கள் நலனில்தான் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்று தோன்றும்… அதெல்லாம் ஒன்றுமில்லை.. பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகமானால் , அதை வைத்து மத்திய , மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பை ஓட்டலாம் என்று அந்த நரிக்கும்பல் காத்துக் கிடந்தது …

லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின் 14 நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டோம்.. சீன வைரசின் இன்குபேஷன் பீரியட் அதிகபட்சம் 14 நாட்கள் தான் ..

அதாவது ஒருவர் அதிகபட்ச நோய் எதிர்ப்புசக்தி உடையவராக இருந்தாலும் , அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் , அதிகபட்சம் 14 நாட்களுக்கு மேல் அவருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்பட்டே தீரும் …இருமல் , காய்ச்சல் , பின் மூச்சுத்திணறல் போன்றவை வரும்… முறையான மருத்துவம் கிடைக்காவிட்டால் அதிகபட்சம் 10 நாட்களுக்குள் , ஆள் காலி …

ஒருவேளை இந்த கூமுட்டைகளெல்லாம் சொல்வது போல எக்கச்சக்கமான மக்களுக்கு நோய்த்தொற்று இருந்திருந்தாலும் இந்த 14 நாட்களில் அனைத்துமே வெளிவந்திருக்கும் …யாரும் மறைக்க முடியாது …

டெல்லியில் நடைபெற்ற தனிநபர் மாநாடு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் , நோய்தொற்று மிகக் கணிசமான அளவில் குறைந்திருக்கும் என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.. டெஸ்ட் செய்தால் எண்ணிக்கை உயரும் என்றும் ஊளையிட்டுக் கொண்டிருந்த கும்பல் இப்போது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை…

இந்த தேசத்துக்கென்று ஒரு ஆன்ம சக்தி உண்டு ..அது எப்போதுமே இந்த தேசத்தைக் காத்து வருகிறது ..மொகலாயர்கள் ஆதிக்கத்தில் சிக்கித் திணறிய இந்த நாட்டை மீட்க ஒரு வீர சிவாஜியையும் விஜயநகர சாம்ராஜ்யத்தையும் கொடுத்தது…

பின்னர் வெள்ளையன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முதலில் பாலகங்காதர திலகரையும் , பின்னர் மகாத்மா காந்தியையும் இந்த தேசம் வழங்கியது. சுதந்திரத்துக்குப்பின் நேருவின் சொதப்பல்களைத் தவிர்க்க ஒரு வல்லப் பாய் பட்டேல் கிடைத்தார்…

இப்போதும் அப்படித்தான் ….மிக நெருக்கடியான கால கட்டத்தை இந்த நாடு கடக்கும் நேரத்தில் தேசத்தின் பிரதமராக திரு . நரேந்திர மோடி இருக்கிறார்… அவரும் இந்தப் பேரிடரை மிகச் சிறப்பாக கையாள்கிறார்…

மிக விரைவில் இந்த தேசம் நெருக்கடியிலிருந்து மீண்டு வரும்…

ஊளையிடுவோர் ஓரமாகப் போய்விடுங்கள்..

ஜெய்ஹிந்த் !

நன்றி சரவண குமார் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...