மருத்துவப் பணியாளர்களை தாக்கினால் குற்றவியல் தண்டனை சட்டத்தில் கடும் நடவடிக்கை

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொருளாதாரம் தொடர்பாகவும் ஆலோசிக்க பட்டதாகத் தகவல் கூறுகின்றன.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “கரோனா சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள்வரை சிறை தண்டனை. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைத் தாக்கினால் குற்றவியல் தண்டனை சட்டத்தில் கடும்நடவடிக்கை எடுக்கப்படும். சிறைத் தண்டனையுடன் ரூபாய் 1 லட்சம் முதல் 5 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவமனைகள், வாகனங்களைச் சேதப்படுத்தினால் இருமடங்கு அபராதத் தொகை வசூலிக்கப்படும். மருத்துவர்களைக் காக்கும்வகையில் அவசரச்சட்டம் கொண்டு வரவும், தொற்று நோய்கள் சட்டம் 1897-ல் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப்பின் அவசரச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது” என்றார்.

இதனிடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூபாய் 15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதில் அவசரக்கால நிதியாக ரூபாய் 7,774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...