24 மணி நேர தடையில்லா மின்சாரம்:மோடி உத்தரவு!

மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்யும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மின் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தசந்திப்பில், மின் துறைக்கு தேவையான நீண்டகால சீர்திருத்தங்கள், தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள், திறனை மேம் படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மின்துறை ஆற்றும் முக்கிய பங்கு குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒப்பந்தங்களை ஏற்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்துறை அமைச்சர் ஆர்கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மின்விநியோக நிறுவனங்களின் திறனை மேம்படுத்துவதற்கும், கட்டணத்தை சீராக்குவதற்கும், சரியான நேரத்தில் மானியங்களை வழங்குவதற்கும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தசந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தசந்திப்பில், மக்களுக்கு 24 நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தசந்திப்புக்கு பின் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மின்துறையின் நிலைத்தன்மை, மீட்சி, திறன்மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், மின்துறையில் தொழில் செய்வதை எளிமையாக்குவது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிப்பது, நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்துவது, அரசு-தனியார் பங்கை மேம்படுத்துவது, மின் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...