வன்கொடுமை சட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில்வைத்து சனிக் கிழமை அதிகாலை காவலர்கள் கைதுசெய்தனர்.

கடந்த பிப்., 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின மக்களுக்கு நீதிபதி பதவிகள் கிடைத்தது எல்லாம் திமுக போட்ட பிச்சை என்கிற ரீதியில் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசினார்.இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக.,வும் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் ஆதித் தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆ.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு விடுவிக்க பட்டுள்ளார் .

அவர்மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அதாவது ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்துநிறுத்துவதற்காக – வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் (Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act, 1989) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 

கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.அப்போது, இந்த விவகாரம் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனால், அவரை சிறையில் அடைக்க முடியாது என திமுக தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை ஏற்றுகொண்ட நீதிபதி அவரை இடைக்கால ஜாமினில் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...