நாட்டின் எல்லைக்குள் சீனா நுழைய வில்லை என பிரதமர் மோடி அனைத்துகட்சி கூட்டத்தில் கூறினார்.
லடாக் பகுதியல் இந்தியா சீனா இடையேயான பிரச்னைகுறித்து விவாதிக்க பிரதமர் மோடி இன்று 19 ம்தேதி )அனைத்துகட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதன்படி வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர்மோடி பேசியதாவது: நமது நாட்டின் எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை. இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த வர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.
சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்ற வில்லை.நாட்டின் ஒரு அங்குல நிலத்தின்மீது யாரும் கண்வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது. நமது நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைககளை நமது ஆயுதப் படை மேற்கொள்ளும் .ஒரேசமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், எல்லைகளை பாதுகாக்க, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். அதேபோன்று நமது ஆயுதப்படைகளின் தேவைகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், அதற்கும் முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.இவ்வாறு மோடி பேசினார்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |