புத்தமதத்தையும், பண்பாட்டையும் கையில் எடுக்கும் பிரதமர்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லைப்பிரச்சினை நீடித்து வருவதால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மற்ற ஆசிய நாடுகளிடமிருந்து ஆதரவுதிரட்டும் நோக்கில் பிரதமர் மோடி புத்தமதத்தையும், பண்பாட்டையும் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது

புத்தமதம் இந்தியாவில் பிறப்பெடுத்திருந்தாலும் தற்போது பூட்டான், தாய்லாந்து, சீனா, மியான்மார், ஜப்பான், வியட்நாம், மங்கோலியா, இலங்கை, லாவோஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வேரூன்றி இருக்கிறது. நேற்று தம்மசக்கர தினத்தை முன்னிட்டு, சாரநாத்தில் புத்தர் வழங்கிய முதல் உபதேசத்தை குறிக்கும் வகையில் மத்தியஅரசு சார்பில் காணொளிக் காட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் குடியரசு தலைவர் மாளிகையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதில், ஜப்பான், லாவோஸ், கம்போடியா, வியட்நாம், இலங்கை, நேபாளம், மங்கோலியா ஆகிய நாடுகளைசேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். திபத்திய புத்தபிரதிநிதிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தலாய் லாமாவின் வீடியோ உரையும் ஒளிபரப்பபட்டது.

ஆனால், சீனா தரப்பிலிருந்து யாரும் இக்கூட்டத்தில் பங்கேற்க வில்லை. புத்தமத செல்வாக்கில் தற்போது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. சீனா தனது புத்தமத தலைவர்களை வளர்த்தெடுப்பதற்காக ஏராளமாக முதலீடு செய்துள்ளது. பிரதமர் மோடியோ புத்தஜெயந்தி உள்ளிட்ட கொண்டாட்டங்களில் பங்கேற்பதோடு, இந்தியாவுக்கும் புத்தருக்கும் இடையே இருக்கும் தொடர்புபற்றி முக்கிய இடங்களில் பேசி வருகிறார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் இருக்கும் புத்த யாத்திரை தலங்களுக்கு வருமாறு யாத்ரீகர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் அழைப்புவிடுத்தார். அவர் பேசுகையில், “இந்தியாவில் ஏராளமான புத்த தலங்கள் இருக்கின்றன. என்னுடையதொகுதி வாரணாசியே சாரநாத்தை உள்ளடக்கியதுதான். புத்த தலங்களுக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதில் அதிககவனம் செலுத்துகிறோம்.

குஷிநகர் விமானநிலையம் சர்வதேச விமானநிலையமாக மாற்றப்படும் என சில தினங்களுக்குமுன் மத்திய அமைச்சரவை அறிவித்தது. இதனால் ஏராளமான மக்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் குஷி நகருக்கு வரமுடியும். இதனால் பொருளாதார வாய்ப்புகளும் பெருகும்.

இன்று உலகமே மோசமான சவால்களை எதிர் கொண்டுள்ளது. இந்த சவால்களுக்கான நிரந்தரதீர்வு புத்தரிடம் இருக்கிறது. புத்தரின் கொள்கைகள் கடந்த காலத்திற்கு ஏற்றதாக இருந்தது மட்டுமல்லாமல் நிகழ்காலத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. எதிர் காலத்திற்கும் நிச்சயமாக ஏற்றதாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், புத்தநியமன இலக்கியங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் ‘மங்கோலிய கஞ்சுர்’ புத்தகத்தின் ஐந்துபாகங்களை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் பிரகலாத் படேல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், மங்கோலிய தூதர் கோன்சிங் கன்பாய்டுக்கும் பரிசாக வழங்கினார்.

இப்புத்தகத்தின் ஒட்டுமொத்த 108 பாகங்களையும் அச்சடித்து மங்கோலியாவில் இருக்கும் அனைத்து புத்தமடங்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...