கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கிய சீனா

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்திய – சீனப்படைகள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு படைகளை திரும்ப பெறப்பட்டுவிட்டதை அடுத்து கல்வான் பள்ளத்தாக்கு  உள்ளிட்ட பகுதிகள் படைகள் அற்றப்பகுதியாக மாறிவிட்டன.

இரு நாட்டுப் படைகளும் சுமார் 2 கி.மீ. அளவுக்கு விலக்கிக் கொள்ளப் பட்டிருப்பதால், 2 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் நீடித்துவந்த பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லையின் சிலஇடங்களில் அண்மையில் இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்னை ஏற்பட்டது. இருதரப்பும் அங்கு படைகளை குவித்தன. கடந்த மாதம் 15-ம் தேதி சீனதரப்பு ஏற்படுத்திய கண்காணிப்பு கோபுரத்தை இந்திய ராணுவம் அப்புறப்படுத்தியது. இதையடுத்து, இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், இரும்புத் தடிகள் பயன்படுத்தப்பட்ட இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா்.இதையடுத்து, இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சு நடைபெற்றது.  மத்திய பாதுகாப்புத்துறை செயலா் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி இடையே பேச்சு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து பிரச்னைக்குரிய எல்லை பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை திரும்பப் பெறத்தொடங்கியது. பாயிண்ட் 15 பகுதியில் இருந்து ராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றை சீனராணுவம் திங்கள் கிழமை அப்புறப் படுத்திவிட்டு பின் வாங்கியது.

இதைத்தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை கிழக்கு லடாக் எல்லையின் ஹாட்ஸ் ஃபிரிங்ஸ், கோக்ரா பகுதியில் இருந்து சீனபடைகள் திரும்பப் பெறப்பட்டன. அங்கு சீன ராணுவத்தினா் அமைத்திருந்த தற்காலிக உள்கட்டமைப்பு வசதிகள் அப்புறப்படுத்த பட்டுவிட்டன.

இதனிடையே, எல்லையில் இருதரப்புமே படைகளை வாபஸ் பெற்றுக்கொண்டு பழைய நிலைக்கு திரும்பியதை இரு நாடுகளும் இணைந்து உறுதிசெய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கிழக்குலடாக் எல்லையில் பிரச்னை ஏற்பட்ட பிறகு இருநாடுகளும் அமைத்திருந்த ராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு விட்டன என்பதை இந்தியாவும், சீனாவும் இணைந்து உறுதிசெய்ய இருக்கின்றன. இதற்காக இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் நேரடியாக அப்பகுதிகளைப் பாா்வையிடுவாா்கள். இதனை இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படும்’ என்றாா்.

ஹாட்ஸ் ஃபிரிங்ஸ் மற்றும் கோக்ரா பகுதியில் சீனராணுவம் தனது படைகளை வாபஸ் பெற்றுவிட்டது. அங்கு முகாமிட்டிருந்த ராணுவ வாகனங்கள் திரும்பிச் சென்று விட்டன என்பதை இந்திய ராணுவத் தரப்பும் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் அப்பகுதியில் இந்திய ராணுவம் தொடா்ந்து தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுவருகிறது.

ஏனெனில், கோக்ரா மற்றும் ஹாட்ஸ் ஃபிரிங்ஸ் பகுதிகளில்தான் இரு தரப்பு ராணுவமும் நெருக்கமாக முகாமிட்டிருந்தன. கடந்த இருமாதங்களாக அங்கு கடும் பதற்றமும் நிலவி வந்தது.

இந்தியா-சீனா இடையே எல்லைபதற்றம் தொடா்பாக இந்த வாரமும் பேச்சு வாா்த்தை தொடரும் என்று அறிவிக்க பட்டுள்ளது.

One response to “கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கிய சீனா”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...