சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடன் அளிக்க ஒப்புதல்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இது வரை ரூ.1,14,502 கோடி கடன் அளிக்க வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது:

ஜூலை 4-ம் தேதி நிலவரப்படி பொது துறை மற்றும் தனியாா்வங்கிகள் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதில் ரூ.56,091.81 கோடிகடன் அளிக்கப்பட்டுவிட்டது.

பொதுத்துறை வங்கிகள் ரூ.65,863.63 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்து அதில் ரூ.35,576.48 கோடிகடன் அளித்து விட்டன. தனியாா் வங்கிகள் ரூ.48,638.96 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்து, அதில் ரூ.20,515.70 கோடிகடன் அளித்துள்ளன.

அதிகபட்சமாக முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.20,628 கோடிகடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப்நேஷனல் வங்கி ரூ.8,689 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ.3,605 கோடி கடன் பெற்றுள்ளன. இதற்கு அடுத்து தமிழ்நாட்டைச் சோ்ந்த நிறுவனங்கள் ரூ.3,871 கோடி கடன் பெற்றுள்ளன. ரூ.6,616 கோடி கடனுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...