புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் பாஜக சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தேசியசெயலாளர் கெ.எச். ராஜா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்..
தேசிய கல்விகொள்கையினை எதிர்க்கும் அரசியல் கட்சியினர் இந்தி மொழியை எதிர்க்கின்றேன் என்று ஏழை, எளிய மாணவர்களின் எதிர் காலத்தை பாழக்குகின்றனர்.
அவர்களின் பிள்ளைகள், பேரன்கள் மட்டும் இந்திமொழி கற்கும் பள்ளியில் படிப்பது ஞாயமா அவர்களையும் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டியதுதானே என்றும், வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை பாஜக முடிவுசெய்யும் என்றார்.
பாரத பிரதமரின் கிஷான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டில் ஈடுப்பட்ட அதிகாரிகள்மீது தமிழக அரசு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார். நீட்தேர்வுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு முறையாக அளிக்கவேண்டும். நீட் தேர்வை எதிர்க்ககூடாது என்றார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
1acknowledge