குறைந்த செலவில் தரமான சுகாதார வசதி

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், இ அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அம்மாநிலத்தின் ரேவாவில் உள்ள ஷ்யாம்ஷா அரசு மருத்துவக் கல்லூரியின் சிறப்புப் பிரிவைக் காணொளிவாயிலாக இன்று திறந்து வைத்தனர்.

மத்திய அரசின் பிரதான்மந்திரி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் ரூபாய் 150 கோடி ரூபாய் செலவில், இந்த 200 படுக்கைகள் கொண்ட சிறப்புப்பிரிவு கட்டப்பட்டுள்ளது.

நரம்பியல்,  நரம்பியல் அறுவைசிகிச்சை, சிறு நீரகவியல், இருதய வியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இந்த சிறப்புப்பிரிவில் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், சுகாதார துறையில் இந்தியா தன்னிறைவை அடைவதற்கு இந்த சிறப்புப்பிரிவு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

முன்னாள் அடல் பிகாரி வாஜ்பாய், 2003 ஆம் ஆண்டு தமது சுதந்திர தின விழா உரையில்,  பிரதான் மந்திரி சுரக்ஷாயோஜனா திட்டத்தின் கீழ் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்படும் என்று அறிவித்ததாக அமைச்சர் கூறினார். பிரதமர் நரேந்திரமோடியின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு, குறைந்தவிலையில் தரமான சுகாதாரவசதிகளை அளிக்க உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 6-ல் இருந்து 22 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் ஹர்ஷ வர்தன், மேலும் 75 மருத்துவமனைகளை, எய்ம்ஸ் தரத்தில் உயர்த்த திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கொவிட்-19க்கு எதிரான இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், மத்திய அரசின் நோய்தடுப்பு முயற்சிகளினால் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை குறைந்து, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகதெரிவித்தார். மொத்த பரிசோதனையின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ளது என்றார் அவர்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப் பிடிப்பது, கைகளைச்சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட வழிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...