சொந்த நாட்டுக்கு எதிரான, தேசதுரோக கருத்து

நேற்று, பா.ஜ., தேசியசெய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:’ஜம்மு — காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான, சட்டப்பிரிவு, 370 ரத்து செய்யப்பட்டதை, சீனாவின் உதவியுடன் மீட்போம்’ என, ஜம்மு – காஷ்மீரின் முன்னாள்முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக்அப்துல்லா, ‘டிவி’ பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதன்வாயிலாக, அவர் சீனாவின் ஆதரவாளராக உருவெடுத்துள்ளார். மேலும், கிழக்குலடாக் எல்லையில், சீனாவின் அத்துமீறலை நியாயப்படுத்தி பேசியுள்ளார். ஜம்மு — காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தற்போதைய, எம்பி.,யுமாக இருக்கும் ஒருவர், சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகபேசுவது வேதனை அளிக்கிறது. ஆளும் கட்சியை விமர்சிக்கும் உரிமை, எதிர்க் கட்சியினருக்கு உள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி மீது இருக்கும் வெறுப்புணர்வால், சொந்த நாட்டுக்கு எதிரான, தேசதுரோக கருத்தை, ஒரு எம்.பி., தெரிவிப்பது முறையல்ல.

வேடிக்கைவரலாற்றை புரட்டி பார்த்தால், இது போன்ற கருத்துக்களை, ராகுலும் அவ்வப்போது கூறிவருகிறார். இருவரும், ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்.பாலகோட் தாக்குதலை கேள்விக்கு உட்படுத்தியபோது, பாகிஸ்தானில் ராகுல், ‘ஹீரோ’வாக பார்க்கப்பட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.எல்லையில், சீன ஆக்கிரமிப்புக்கு, காங்., தலைவர்கள் ஒருவர்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனாவின் அத்துமீறலை, காங்., எப்போதும் வேடிக்கை பார்ப்பதையே, வாடிக்கையாக வைத்துள்ளது.

காங்கிரஸ்  துாண்டிவிடுவதன் காரணமாகவே, பரூக் அப்துல்லா, இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை பேசிவருகிறார்; இதன் பின்னணியில் காங்கிரஸ் இருக்கிறது என்று , அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...