சொந்த நாட்டுக்கு எதிரான, தேசதுரோக கருத்து

நேற்று, பா.ஜ., தேசியசெய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:’ஜம்மு — காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான, சட்டப்பிரிவு, 370 ரத்து செய்யப்பட்டதை, சீனாவின் உதவியுடன் மீட்போம்’ என, ஜம்மு – காஷ்மீரின் முன்னாள்முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக்அப்துல்லா, ‘டிவி’ பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதன்வாயிலாக, அவர் சீனாவின் ஆதரவாளராக உருவெடுத்துள்ளார். மேலும், கிழக்குலடாக் எல்லையில், சீனாவின் அத்துமீறலை நியாயப்படுத்தி பேசியுள்ளார். ஜம்மு — காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தற்போதைய, எம்பி.,யுமாக இருக்கும் ஒருவர், சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகபேசுவது வேதனை அளிக்கிறது. ஆளும் கட்சியை விமர்சிக்கும் உரிமை, எதிர்க் கட்சியினருக்கு உள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி மீது இருக்கும் வெறுப்புணர்வால், சொந்த நாட்டுக்கு எதிரான, தேசதுரோக கருத்தை, ஒரு எம்.பி., தெரிவிப்பது முறையல்ல.

வேடிக்கைவரலாற்றை புரட்டி பார்த்தால், இது போன்ற கருத்துக்களை, ராகுலும் அவ்வப்போது கூறிவருகிறார். இருவரும், ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்.பாலகோட் தாக்குதலை கேள்விக்கு உட்படுத்தியபோது, பாகிஸ்தானில் ராகுல், ‘ஹீரோ’வாக பார்க்கப்பட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.எல்லையில், சீன ஆக்கிரமிப்புக்கு, காங்., தலைவர்கள் ஒருவர்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனாவின் அத்துமீறலை, காங்., எப்போதும் வேடிக்கை பார்ப்பதையே, வாடிக்கையாக வைத்துள்ளது.

காங்கிரஸ்  துாண்டிவிடுவதன் காரணமாகவே, பரூக் அப்துல்லா, இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை பேசிவருகிறார்; இதன் பின்னணியில் காங்கிரஸ் இருக்கிறது என்று , அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...