உலகளவில் போட்டிபோடும் விதத்தில் புதியவைகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும்

தற்சார்பு இந்தியாவை உருவாக்க, விஞ்ஞானிகள் புதுமையைகண்டுபிடித்து போட்டியை ஏற்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ, அறிவியல் தொழில்நுட்பம், புவிஅறிவியல், சுகாதாரத்துறை ஆகிய அமைச்சகங்கள்   நடத்துகின்றன. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி ‘‘தற்சார்பு இந்தியா மற்றும் உலகளாவிய நலன்’’ என்ற தலைப்பில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தர்மேந்திரபிரதான் பேசியதாவது:

உலகளவில் போட்டிபோடும் விதத்தில் புதியவைகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும். சமூகவளர்ச்சியில் அறிவியல் மற்றும் புதுமையின் பங்கு முக்கியமானது. அனைத்து துறைகளிலும், நமது அறிவியல் அறிவு மற்றும் புதுமையை மேம்படுத்தி வலுப்படுத்தவேண்டும் என்பதை கொவிட்-19 தொற்று நிருபித்துள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டம், சொந்ததேவையை மட்டும் நிறைவேற்றுவதில்லை, அது உலக சமுதாயத்தின்  நம்பிக்கையாக உள்ளது.  யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பொருள்படும் வகையிலான வசுதைவஹ குடும்பகம் என்ற உணர்வை ஏற்படுத்தும். சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சரியாக பயன் படுத்தாமல், இந்தியாவின் தற்சார்பு முயற்சியை அடையமுடியாது என பிரதமர் கூறியுள்ளார். வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சூழல் மூலம் மிகச்சிறந்த தயாரிப்புகளையும்,சேவைகளையும் நாம் முடியும். நமது பழங்கால பாரம்பரியத்துடன், நவீன அறிவியல் மற்றும் கணிதத்தை ஒன்றிணைத்து நமது விஞ்ஞானிகள் புதுமைகளை படைத்து சாதிக்கவேண்டும்.

விண்வெளி ஆராய்ச்சி, வேளாண்மை, மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நமது விஞ்ஞானிகள், தொழில் மற்றும் சமூக பிரச்னைகளுக்கும் தீர்வுகாண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...