தற்சார்பு இந்தியாவை உருவாக்க, விஞ்ஞானிகள் புதுமையைகண்டுபிடித்து போட்டியை ஏற்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ, அறிவியல் தொழில்நுட்பம், புவிஅறிவியல், சுகாதாரத்துறை ஆகிய அமைச்சகங்கள் நடத்துகின்றன. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி ‘‘தற்சார்பு இந்தியா மற்றும் உலகளாவிய நலன்’’ என்ற தலைப்பில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தர்மேந்திரபிரதான் பேசியதாவது:
உலகளவில் போட்டிபோடும் விதத்தில் புதியவைகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும். சமூகவளர்ச்சியில் அறிவியல் மற்றும் புதுமையின் பங்கு முக்கியமானது. அனைத்து துறைகளிலும், நமது அறிவியல் அறிவு மற்றும் புதுமையை மேம்படுத்தி வலுப்படுத்தவேண்டும் என்பதை கொவிட்-19 தொற்று நிருபித்துள்ளது.
தற்சார்பு இந்தியா திட்டம், சொந்ததேவையை மட்டும் நிறைவேற்றுவதில்லை, அது உலக சமுதாயத்தின் நம்பிக்கையாக உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பொருள்படும் வகையிலான வசுதைவஹ குடும்பகம் என்ற உணர்வை ஏற்படுத்தும். சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சரியாக பயன் படுத்தாமல், இந்தியாவின் தற்சார்பு முயற்சியை அடையமுடியாது என பிரதமர் கூறியுள்ளார். வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சூழல் மூலம் மிகச்சிறந்த தயாரிப்புகளையும்,சேவைகளையும் நாம் முடியும். நமது பழங்கால பாரம்பரியத்துடன், நவீன அறிவியல் மற்றும் கணிதத்தை ஒன்றிணைத்து நமது விஞ்ஞானிகள் புதுமைகளை படைத்து சாதிக்கவேண்டும்.
விண்வெளி ஆராய்ச்சி, வேளாண்மை, மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நமது விஞ்ஞானிகள், தொழில் மற்றும் சமூக பிரச்னைகளுக்கும் தீர்வுகாண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |