பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது.

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்  படாது என்று மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 20வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி வருமாறு:மகாராஷ்டிராவில் விதர்பா பிராந்தியத்தில் ஏழைவிவசாயிகள் 10 ஆயிரம் பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். நான் அந்த பகுதியைச் சேர்ந்தவன். எனக்கு விவசாயிகளின் நிலைமைதெரியும். டெல்லியில் தற்போது போராடும் விவசாயிகளுடன் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலும், வேளாண் அமைச்சர் தோமரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் எழுப்பும் பிரச்சனைகள் நியாயமானவை. அவைகுறித்து விவாதிக்க வேண்டும். பேச்சுவார்த்தையே இல்லாமல் போனால், அது தவறான தகவல்களைக் கொண்டுபோய் சேர்க்கும். தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளோம். புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். பாஜக அரசு விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அவர்களின் பரிந்துரைகளை ஏற்க தயாராக உள்ளது . பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்தஅநீதியும் இழைக்கப்படாது. அன்னா ஹசாரே அந்தபோராட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்றே கருதுகிறேன். இவ்வாறு நிதின்கட்கரி கூறியுள்ளார்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...