முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளவில்லை என நாங்கள் சொல்லவில்லையே

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியதாவது;  தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர்வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கலின்போது நமது முதல்வரும் சென்றார். இது, வேட்புமனு தாக்கல் செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறை. இப்போது, அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

அதற்கு எங்களுடைய தேசிய தலைமை ஒப்புதல் அளித்து அறிவிக்கும் என்றே நான் கூறிவருகிறேன். அதை இப்போதும் கூறுகிறேன். முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளவில்லை என எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. சிலர் ஏதோ நடக்கவேண்டும் என நினைக்கின்றனர். அது நடக்காது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேசியஜனநாயக கூட்டணி தொடரும் என அறிவித்தனர்.

இது, எங்களது தேசிய முன்னாள் தலைவரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இருந்தமேடையில் அறிவிக்கப்பட்டது. இதை அமித்ஷா முறைப்படி மேலிடத்துக்கு சொல்வார். அங்கிருந்து அறிவிப்புவரும். தமிழகத்தில் ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது. இக்கூட்டணியின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எங்களதுகூட்டணி வலுவாக உள்ளது.

இக்கூட்டணிதான் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்கப்போகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சியினர் உட்கார்ந்துபேசுவர். அப்போது பாஜகவுக்கு எத்தனைசீட் என்பது குறித்து நிச்சயமாக முடிவு எடுக்கப்படும். பாஜகவுக்கு ஏபிசி டீம் என எதுவும் தேவைகிடையாது. பாஜக ஒரே டீம்தான். அதிமுக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

நாங்களும் தேர்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாக வெற்றிவேல் யாத்திரை நடத்தி மக்களைச் சந்தித்தோம். இப்போது, ஆயிரம் இடங்களில் கூட்டங்களை நடத்தி விவசாயிகளைச் சந்தித்துவருகிறோம். எங்களது அகில இந்திய தலைமை கூறிய பிறகு தேர்தல் பிரசாரத்தை முறையாக தொடங்குவோம். ஏழைகள், சிறு விவசாயிகள் உள்ளிட்டோருக்காக பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ. 2,500 வீதம் வழங்கப்படும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முருகன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...