முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளவில்லை என நாங்கள் சொல்லவில்லையே

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியதாவது;  தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர்வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கலின்போது நமது முதல்வரும் சென்றார். இது, வேட்புமனு தாக்கல் செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறை. இப்போது, அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

அதற்கு எங்களுடைய தேசிய தலைமை ஒப்புதல் அளித்து அறிவிக்கும் என்றே நான் கூறிவருகிறேன். அதை இப்போதும் கூறுகிறேன். முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளவில்லை என எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. சிலர் ஏதோ நடக்கவேண்டும் என நினைக்கின்றனர். அது நடக்காது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேசியஜனநாயக கூட்டணி தொடரும் என அறிவித்தனர்.

இது, எங்களது தேசிய முன்னாள் தலைவரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இருந்தமேடையில் அறிவிக்கப்பட்டது. இதை அமித்ஷா முறைப்படி மேலிடத்துக்கு சொல்வார். அங்கிருந்து அறிவிப்புவரும். தமிழகத்தில் ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது. இக்கூட்டணியின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எங்களதுகூட்டணி வலுவாக உள்ளது.

இக்கூட்டணிதான் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்கப்போகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சியினர் உட்கார்ந்துபேசுவர். அப்போது பாஜகவுக்கு எத்தனைசீட் என்பது குறித்து நிச்சயமாக முடிவு எடுக்கப்படும். பாஜகவுக்கு ஏபிசி டீம் என எதுவும் தேவைகிடையாது. பாஜக ஒரே டீம்தான். அதிமுக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

நாங்களும் தேர்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாக வெற்றிவேல் யாத்திரை நடத்தி மக்களைச் சந்தித்தோம். இப்போது, ஆயிரம் இடங்களில் கூட்டங்களை நடத்தி விவசாயிகளைச் சந்தித்துவருகிறோம். எங்களது அகில இந்திய தலைமை கூறிய பிறகு தேர்தல் பிரசாரத்தை முறையாக தொடங்குவோம். ஏழைகள், சிறு விவசாயிகள் உள்ளிட்டோருக்காக பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ. 2,500 வீதம் வழங்கப்படும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முருகன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...