கேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமேன் ஸ்ரீதரன்

கேரள சட்டமன்றதேர்தலில் பினராயி விஜயனுக்கு எதிராக பாஜக சார்பில் முதல்வர் வேட்பளாகர மேட்ரோமேன் ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஒரேகட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 140 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கேரளமாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஏப்ரல் 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் மூன்றாவது அணியாக உருவாக பாஜக தீவிரமாக முயன்றுவருகிறது. மக்கள் மத்தியில் ஆதரவைதிரட்ட மேட்ரோ மேன் ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது.

கேரளாவைப் பொறுத்தவரை தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கொண்ட இடதுசாரிகள் ஒருஅணியாக உள்ளது. அவர்களை எதிர்த்து காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாக உள்ளன. இந்த இருகட்சிகளுக்கு மத்தியில் மூன்றாவது அணியாக உருவாக வேண்டும் என்றே பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.

கடந்த காலங்களைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி ஆகிய இரண்டும்தான் கேரளமாநிலத்தை மாற்றிமாற்றி ஆட்சி செய்துள்ளன. அவர்களை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கேரளாவில் காலூன்ற முடியவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில்கூட 98 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவால் வெறும் ஒற்றை தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது.

தற்போது மேட்ரோ மேன் ஸ்ரீதரனை கட்சி முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.டெல்லி மெட்ரோ ரயில், நாட்டின் பலசிக்கலான பாலங்கள் என முக்கிய கட்டுமானங்களை உருவாக்கியவர் மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜகவின் இணைந்தார். கேரளமாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணி செய்யவில்லை என்றும் கேரளாவுக்கு வளர்ச்சிக்கு ஏதாவதுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே பாஜகவில் இணைவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என்றும் சூசகமாக அப்போதே தனதுவிருப்பத்தையும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இடையே ஒரு ஒரு சிக்கல் மட்டும் இருந்தது. மேட்ரோ மேன் ஸ்ரீதரனுக்கு இப்போது 88 வயது ஆகிறது. 75 வயதைக் கடந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடுவது, முக்கிய பொறுப்புகளை வழங்குவது ஆகியவற்றில் மோடி-அமித் ஷா தலைமைக்கு உன்பாடு இல்லை. இருப்பினும், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்த விதிகளையும் அவர்கள் தளர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் மேட்ரோ மேன் ஸ்ரீதரனை முன்னிறுத்த கட்சி முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே சபரிமலை போராட்டத்திலும் கூட கேரளாவில் பாஜகவுக்குக் கொஞ்சம் ஆதரவு கிடைத்தது. அத்துடன் நல்ல நிர்வாகி என்றபெயர் எடுத்துள்ள ஸ்ரீதரனும் கட்சியில் இணைந்துள்ளதால், இது கட்சிக்கு பூஸ்ட்கொடுக்கும்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...