விடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்

மதுரையில் பாஜகவினரைத் தாக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம்முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சித் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.

மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலைஅணிவிக்க பாஜகவினர் வந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்புதெரிவித்தனர். அப்போது நடந்த மோதலில் பாஜகவினர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தடைசெய்ய வலியுறுத்தியும், பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

விடுதலை சிறுத்தைகள்கட்சியினரின் வன்முறைக்கு பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்.
திருமாவளவன் வன்முறையைத் தூண்டிவிட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றுள்ளார். இதனை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கவேண்டும். இல்லாவிட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது.

பாஜகவினரைத் தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

பாஜக பொதுச் செயலர் ஆர்.சீனிவாசன் பேசியதாவது:

மதுரையில் போலீஸார் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். பாஜகவினர், பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. பாஜ கவினருக்கு எதிரான புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

One response to “விடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...