விடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்

மதுரையில் பாஜகவினரைத் தாக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம்முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சித் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.

மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலைஅணிவிக்க பாஜகவினர் வந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்புதெரிவித்தனர். அப்போது நடந்த மோதலில் பாஜகவினர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தடைசெய்ய வலியுறுத்தியும், பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

விடுதலை சிறுத்தைகள்கட்சியினரின் வன்முறைக்கு பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்.
திருமாவளவன் வன்முறையைத் தூண்டிவிட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றுள்ளார். இதனை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கவேண்டும். இல்லாவிட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது.

பாஜகவினரைத் தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

பாஜக பொதுச் செயலர் ஆர்.சீனிவாசன் பேசியதாவது:

மதுரையில் போலீஸார் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். பாஜகவினர், பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. பாஜ கவினருக்கு எதிரான புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

One response to “விடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...