80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம்

கரோனா பரவல் அதிகரித்துவருவதை கருத்தில்கொண்டு, நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கும் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது. ரூ.26 ஆயிரம்கோடியில் இத்திட்டம் செயல்படுத்த பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் தீவிரமடைந்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து பதிவாகி வருகிறது. வைரஸ்பரவலை தடுப்பதற்காக சில மாநிலங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும், பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தீவிரஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பல்வேறு மாநிலங்கள் பரிசீலித்து வருகின்றன.

மே மாதத்தில் இந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதன்காரணமாக வரும் நாட்களில் நாடுமுழுவதும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா பாதிப்பை எதிர்கொள்வது குறித்து மத்திய சுகாதாரம், உணவுபாதுகாப்பு ஆகிய துறைகளின் உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சிலநாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். அசாதாரண சூழல் நிலவிவரும் நேரத்தில் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேசிய அளவிலான திட்டத்தை வகுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து, இதற்கான வரைவுத்திட்டம் சில தினங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. இதை பரிசீலித்த பிரதமர் நரேந்திர மோடி, இத்திட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, ‘கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 80 கோடி ஏழைமக்களுக்கும் மே, ஜூன் மாதங்களில் 5 கிலோ உணவுதானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், ரூ.26 ஆயிரம்கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, கரோனா பரவல்விவகாரம் குறித்து மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனா வைரஸ் முதல் அலையின்போது, அஞ்சாமல் விழிப்புடன் செயல்பட்டு, பேரிடரை எதிர்கொண்டோம். கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் போரிட்டதால் தான் வைரஸ் பரவலை பலமடங்கு குறைக்க முடிந்தது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் மட்டுமே உயிரிழப்புவிகிதம் குறைவாக இருந்தது. ஒற்றுமையின் பலத்தை இயற்கை அன்று நமக்கு உணர்த்தியது. இப்போது, கரோனாவைரஸின் இரண்டாவது அலை நம் முன்பு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இந்த முறையும், அரசியல் வேறுபாடுகளை கடந்து நாம் ஓரணியில் நின்றால் பெருந்தொற்றை எளிதில் வெற்றிகொள்ளலாம்.

அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்சிஜனின் தேவை இருக்கிறது. இதை கருத்தில்கொண்டு, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், அவற்றை விரைவாக விநியோகிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

அதேநேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் தடுக்கப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக கேள்விப்படுகிறேன். இது மிகவும் மோசமான செயல். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக்சிஜன் டேங்கர்லாரிகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்.

ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதையும், கள்ளச்சந்தைகளில் விற்கப்படுவதையும் மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கவேண்டும். ஆக்சிஜன்சிலிண்டர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கப்படுவதை உறுதி செய்ய, உயர்நிலைக் குழுக்களை மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.

மாநிலங்களின் அவசர தேவைகருதி, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ரயில்களிலும், விமானப் படை விமானங்களிலும் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமருடன் முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவால் நடத்தியஉரையாடலை மத்திய அரசின் அனுமதியின்றி டெல்லி முதல்வர் அலுவலகம் தொலைக் காட்சியில் நேரலையில் ஒளிபரப்பியது. இதையறிந்த பிரதமர் மோடி, கேஜ்ரிவால் பேசிக்கொண்டிருந்த போதே குறுக்கிட்டார்.

“இந்த ஆலோசனை கூட்ட நிகழ்ச்சிகளை ஒருமுதல்வர் கட்டுப்பாடுகளை மீறி நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டு இருக்கிறார். இது சட்டத்துக்கு புறம்பானது. நாம் அனைவரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்’’ என கோபமாக கூறினார். இதையடுத்து, நேரலை உடனடியாக ரத்துசெய்யப்பட்டது. பின்னர் தனது செயலுக்காக பிரதமரிடம் முதல்வர் கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...