ஒருவர் வளரும் சூழ்நிலையே அவரது குணத்தைத் தீர்மானிக்கிறது

 ஒருவர் வளரும் சூழ்நிலையே அவரது குணத்தைத் தீர்மானிக்கிறதுவேடன் ஒருவன் பறவைகளை வேட்டையாடுவதற்காக, ஒருநாள் காட்டுக்குச் சென்றான். ஒரு மரக்கிளையில், கூட்டில் இருக்கும் இரு கிளிகளைப் பார்த்ததும், அவை இரண்டையும் உயிருடன் பிடித்து எடுத்துச் செல்லும்போது, அவற்றுள் ஒரு கிளி எப்படியோ தப்பித்துப் பறந்துவிட்டது. கையிலிருந்த அந்த ஒற்றைக் கிளியோடு வீடு திரும்பிய வேடன், அதைப் பேசப் பழக்கினான். ஒருசில நாட்களிலேயே, வேடன் பேசும் அனைத்தையும் அந்தக் கிளி கற்றுக்கொண்டுவிட்டது. தப்பித்துச் சென்ற மற்றொரு கிளி, ஒரு முனிவரின் கையில் கிடத்தது. தனது ஆஸ்ரமத்திற்கு அதனை எடுத்துச் சென்று, வேத மந்திரங்களையும், நல்ல வார்த்தைகளையும் அதற்குப் பழக்கினார் அந்த முனிவர். இவ்வாறு அவ்விரு கிளிகளும் தனித்தனியே அந்தக் காட்டின் இரு மூலைகளில் வாழ்ந்துகொண்டிருந்தன.

ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் ஒரு அரசன் வேட்டைக்கென ஒரு குதிரை மீது அமர்ந்து அந்தக் காட்டுப் பக்கம் வந்தான். வேடனின் குடிசைக்கு அருகில் அவன் வந்தபோது, அவனைப் பார்த்த அந்தக் கிளி, "ஓடு, ஓடு, யாரோ ஒருவன் குதிரையின் மீது வந்துகொண்டிருக்கிறான். அவனைப் பிடி; கொல்" எனக் கூச்சலிட்டது.

அதைக் கேட்ட அரசன் உடனடியாக அங்கிருந்து அகன்று, முனிவரின் ஆஸ்ரம இருந்த காட்டின் மறு கோடிக்குச் சென்றான். அங்கேயும் ஒரு கிளி கூண்டில் அமர்ந்திருந்தது. அரசன் வருவதைப் பார்த்ததும், அந்தக் கிளி, "வாருங்கள், அரசே! வந்து இளைப்பாறுஙள். குளிர்ந்த நீர் பருகி, இனிய பழங்களை உண்டு, சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்" என இதமாகச் சொன்னது. "வணக்கத்துக்குரிய முனிவரே! வந்து அரசனை வரவேற்று உபசரியுங்கள். அவர் நமது ஆஸ்ரமத்துக்கு வருகை தந்திருக்கிறார்' என முனிவரை அழைத்தது.

இந்தச் சொற்களைக் கேட்ட அரசன் வியப்படைந்தான். வேடனின் கிளி மரியாதை இல்லாமலும், இந்தக் கிளி அன்புடனும் பேசியதைக் கேட்ட அந்த அரசன், ஒருவர் வளரும் சூழ்நிலையும், அவர் கூடியிருக்கும் இடத்தில் வசிப்பவர் கற்றுக்கொடுக்கும் போதனைகளுமே ஒருவரது குணத்தைத் தீர்மானிக்கிறது என்பதை உணர்ந்தான். தீய சகவாசம் தீய குணங்களையும், நல்லோர் கூட்டுறவு நல்ல பண்புகளையும் தருகிறது என்னும் பாடத்தை இவ்விரு கிளிகளின் மூலம் அவன் தெரிந்து கொண்டான்.

நன்றி தமிழாக்கம்: Dr . சங்கர் குமார் வட கரோலினா USA

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...