ஒருவர் வளரும் சூழ்நிலையே அவரது குணத்தைத் தீர்மானிக்கிறது

 ஒருவர் வளரும் சூழ்நிலையே அவரது குணத்தைத் தீர்மானிக்கிறதுவேடன் ஒருவன் பறவைகளை வேட்டையாடுவதற்காக, ஒருநாள் காட்டுக்குச் சென்றான். ஒரு மரக்கிளையில், கூட்டில் இருக்கும் இரு கிளிகளைப் பார்த்ததும், அவை இரண்டையும் உயிருடன் பிடித்து எடுத்துச் செல்லும்போது, அவற்றுள் ஒரு கிளி எப்படியோ தப்பித்துப் பறந்துவிட்டது. கையிலிருந்த அந்த ஒற்றைக் கிளியோடு வீடு திரும்பிய வேடன், அதைப் பேசப் பழக்கினான். ஒருசில நாட்களிலேயே, வேடன் பேசும் அனைத்தையும் அந்தக் கிளி கற்றுக்கொண்டுவிட்டது. தப்பித்துச் சென்ற மற்றொரு கிளி, ஒரு முனிவரின் கையில் கிடத்தது. தனது ஆஸ்ரமத்திற்கு அதனை எடுத்துச் சென்று, வேத மந்திரங்களையும், நல்ல வார்த்தைகளையும் அதற்குப் பழக்கினார் அந்த முனிவர். இவ்வாறு அவ்விரு கிளிகளும் தனித்தனியே அந்தக் காட்டின் இரு மூலைகளில் வாழ்ந்துகொண்டிருந்தன.

ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் ஒரு அரசன் வேட்டைக்கென ஒரு குதிரை மீது அமர்ந்து அந்தக் காட்டுப் பக்கம் வந்தான். வேடனின் குடிசைக்கு அருகில் அவன் வந்தபோது, அவனைப் பார்த்த அந்தக் கிளி, "ஓடு, ஓடு, யாரோ ஒருவன் குதிரையின் மீது வந்துகொண்டிருக்கிறான். அவனைப் பிடி; கொல்" எனக் கூச்சலிட்டது.

அதைக் கேட்ட அரசன் உடனடியாக அங்கிருந்து அகன்று, முனிவரின் ஆஸ்ரம இருந்த காட்டின் மறு கோடிக்குச் சென்றான். அங்கேயும் ஒரு கிளி கூண்டில் அமர்ந்திருந்தது. அரசன் வருவதைப் பார்த்ததும், அந்தக் கிளி, "வாருங்கள், அரசே! வந்து இளைப்பாறுஙள். குளிர்ந்த நீர் பருகி, இனிய பழங்களை உண்டு, சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்" என இதமாகச் சொன்னது. "வணக்கத்துக்குரிய முனிவரே! வந்து அரசனை வரவேற்று உபசரியுங்கள். அவர் நமது ஆஸ்ரமத்துக்கு வருகை தந்திருக்கிறார்' என முனிவரை அழைத்தது.

இந்தச் சொற்களைக் கேட்ட அரசன் வியப்படைந்தான். வேடனின் கிளி மரியாதை இல்லாமலும், இந்தக் கிளி அன்புடனும் பேசியதைக் கேட்ட அந்த அரசன், ஒருவர் வளரும் சூழ்நிலையும், அவர் கூடியிருக்கும் இடத்தில் வசிப்பவர் கற்றுக்கொடுக்கும் போதனைகளுமே ஒருவரது குணத்தைத் தீர்மானிக்கிறது என்பதை உணர்ந்தான். தீய சகவாசம் தீய குணங்களையும், நல்லோர் கூட்டுறவு நல்ல பண்புகளையும் தருகிறது என்னும் பாடத்தை இவ்விரு கிளிகளின் மூலம் அவன் தெரிந்து கொண்டான்.

நன்றி தமிழாக்கம்: Dr . சங்கர் குமார் வட கரோலினா USA

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...