நான் ஒரு தாய் தெரியுமா

 நான் ஒரு தாய் தெரியுமா  13 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் இரக்கமற்ற கொடுங்கோல் மன்னன் தைமூர். சொந்த வாழ்வில் நிம்மதியற்ற தைமூர் உலகையே அழித்துவிடத் தீர்மானித் தான். 33 ஆண்டுகள் அழிவுப் பேயாட்டம் ஆடினான். ஒருமுறை தைமூரும் அவன் படைகளும் ரோஜாப் பள்ளத் தாக்கில் முகாமிட்டனர். அந்தப் பகுதி "மலர்களின் அன்பு' என்று கவிஞர்களால் அழைக்கப்பட்டது. 15 ஆயிரம் பாசறைகள்

பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டன; நடுவில் அரசன் தைமூரின் பாசறை. அவனைச் சுற்றிலும் அரசர்கள். நடுவில் கவி கிர்மானி! அவர் எப்போதும் உண்மையே பேசுவார். அனைவரும் தைமூரைக் கண்டு பயந்து நடுங்கினர்; கவி மட்டும் பயப்படுவதில்லை.

அன்று எல்லோரும் கவிஞனின் கவிதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது பெண் ஒருத்தி கூச்சலிடும் ஒலி கேட்டது. சேவகர்கள் உள்ளே வந்து, ""அரசே, உங்களைத் தேடி ஓர் ஏழைப் பெண் வந்திருக்கிறாள்'' என்று அறிவித்தனர். ""அழைத்து வாருங்கள்'' என உத்தரவிட்டான் தைமூர். அப்பெண்மணி தைரியமாகத் தைமூரை அணுகி, ""அரசே, எனக்கு ஓர் அருமையான மகன் இருந்தான். எங்கள் நாட்டை நீங்கள் முற்றுகையிட்டபோது அவனுக்கு ஆறு வயது. உங்கள் படை எங்கள் நிரபராதி மக்களைக் கொன்று குவித்தது; என் மகனைக் கடத்திச் சென்றது. அரசே, நீங்கள் எங்களை வென்று எங்கள் உடமைகளை எல்லாம் உங்களுடையதாக்கிக் கொண்டீர்கள். என் மகன் எங்கிருக்கிறான் என்பதை நீங்கள் கண்டிப்பாக அறிவீர்கள்.

""நான் பல காலம் மலைகளையும், காடுகளையும், பாலைவ னங்களையும் கடந்து வந்தேன். வழியில் அச்சுறுத்திய துஷ்ட மிருகங்களிடம் "பிள்ளையைத் தேடி வரும் தாய் நான்' என்றதுமே அவை விலகி வழிவிட்டன. எனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. ""ஏனெனில் மிருகங்களுக்கும்கூட அம்மாக்கள் உண்டு! அன்னை இல்லாவிட்டால் கவிஞர்கள் ஏது, வீரர்கள் ஏது? பெண் களே இல்லாத உலகில் அன்பும் இல்லை; அன்பில்லாத உலகில் மகிழ்ச்சி எப்படி வரும்? அப்படிப்பட்ட தாயான நான் அரசே, என் மகனைத் திருப்பித் தாருங்கள் என்று கேட்கிறேன்! '' என்றாள்.

தைமூர் கோபமாக, ""பெண்ணே, நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் தெரியுமா?'' என்று கேட்டான். துயரத்தின் உச்சியிலிருந்த அவளோ, ""மன்னா, நீ வெறும் மனிதன்; உயிர் களைப் பறித்து யமனுக்கு ஊழியம் செய்பவன். நானோ ஒரு தாய்! உயிரையே படைக்கவல்லவள். ஆகையால் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்! என் பிள்ளையைத் திருப்பித் தா!'' என முழங்கினாள்.

அதிசயம்! தைமூர் அப்படியே அடங்கி விட்டான். சற்று நேரம் மௌனமாக இருந்தான். அந்தத் தாயின் வார்த்தைகள் ஒரு புதிய கோணத்தை அவனுக்கு உணர்த்தின. அவனது மனம் மாறிற்று. தைமூர், ""பல காலமாக நான் மனிதர் களை அழித்து வந்தேன்; லட்சக்கணக் கான மரணங்களைப் பார்த்துவிட்டேன். எனக்கும் ஒரு மகன் இருந்தான்; ஆனால் அவனை மரணம் கவர்ந்து போய்விட்டது. ""என் பகைவர்கள் தங்கள் நாட்டிற் காக, உடைமைகளுக்காகவே போராடி னர்; யாரும் மக்களுக்காகப் போராட வில்லை. என் வாழ்நாளில் முதல் முறை யாக இதோ, இந்தப் பெண்மணி தன் அன்பு மகனுக்காகப் போராடுகிறாள்.

பிறரிடமும் காணாத துணிவு இவளிடம் இருப்பதன் ரகசியம் இவள் உள்ளத்தில் பொங்கும் அன்புதான். ""நான் மகனை நேசித்த அளவே இவளும் நேசிக்கிறாள்! ஆனால் இவளது அன்பு ஆக்கப்பூர்வமானது. எனது அன்பு முட்டாள்தனமானது'' என்று கூறித் தன் பணியாட்களிடம் அவளது மகனை அவளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டான்

நன்றி கே.நிருபமா ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...