அதிகரிக்கும் கற்பழிப்பு குற்றங்கள் பாரதம் எங்கே செல்கிறது ?

 அதிகரிக்கும்  கற்பழிப்பு குற்றங்கள் பாரதம் எங்கே செல்கிறது ? வர வர கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறதே?. 20 நிமிடங்களுக்கு ஒரு கற்பழிப்பு நடப்பதாக கூறுகிறார்களே ?. டெல்லியில் இந்த வருடத்தில் மட்டும் 635 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்களே? . இதை முற்றிலும் நிறுத்த முடியுமா? இந்த பாரதம் எங்கே சென்று கொண்டிருக்கிறது…..

தமிழ் தாமரை டால்க்

இந்த பாரதம் எங்கேயும் செல்லவில்லை, இந்த பாரதத்தில் வசிக்கும் மக்கள் தான் தங்கள் அருமையான கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறார்கள் . கடவுள் விலங்குகளுக்கு பகுத்தறிவை தரவில்லை ஆனால் அவைகள் தங்களுக்குள் வகுத்து கொண்ட விதிகளை என்றும் மீறியதில்லை. கடவுள் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவை தந்தான் , வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கு கீதை எனும் அருமையான விதியையும் தந்தான் ஆனால் மனிதனோ அதைவிட்டு விலகி சென்று கொண்டிருக்கிறான்.

தனது அண்ணி சீதையின் முகத்தை கூட பார்க்காத லக்ஷ்மனன்கள் வாழந்த தேசம். பிறன் மனை புகாமை அறம், பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை போன்ற சிறந்த கருத்துக்களை போதித்த மகான்கள் வாழ்ந்த தேசம். தனது மனைவியை தவிர மற்ற அனைத்து பெண்களையும் தாயாகவும் , சகோதரியாகவும் பாவிக்கும் தேசம் . தன்னை விட தனது அண்ணி பத்து வயது இளையவள் என்றாலும் அவளிடம் வணங்கி ஆசிபெறும் சிறந்த கலாச்சாரத்தை கொண்ட தேசம் நமது பாரத தேசம்.

ஆனால் இன்றோ டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் அண்ணியையும் காம கண்ணோட்டத்துடன் பார்க்கும் காட்சிகளும் , ஒழுக்ககேடான காட்சிகளும் கருத்துரிமை என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதையெல்லாம் தொடர்து பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை எப்படி இருக்கும் ?.

இது ஒருபுறம் என்றால் மறுபுறம் மது எனும் அரக்கன் பெரும்பாலான இந்திய இளைஞர்களை ஆட்க்கொண்டு விட்டான. இந்தியாவை மது மயக்க தேசமாக்க வேண்டும் என்ற ஆங்கிலேயனின் நூற்றண்டு கனவு இன்று நிறைவேறி கொண்டிருக்கிறது. மதுவை மறைந்திருந்து அருந்த ஓடி ஒழிந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது . கூட்டாக ஓரிடத்தில் கூடி குடித்து கும்மாளமமிட்டு பெண்களை கேலி செய்யும் புதிய கலாச்சாரம் குடிபுகுநது விட்டது. இதன் உச்சம் தான் கூட்டு கற்பழிப்புகலும், பலாத்காரங்களும். இந்த கலாச்சாரத்துக்கு எல்லாம் அண்ணனாகிய அமெரிக்காவில் மட்டும் வருடத்துக்கு 1,88,380 பெண்கள் பலாத்காரங்களால் பதிக்க படுகின்றனர். கிட்டத்தட்ட இந்த கலாச்சாரத்துக்குள் மூழ்கிவிட்ட டெல்லி போன்ற நகரங்களில் 635 எனும் எண்ணிக்கையில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

காமகாட்சிகளும் , மது மயக்கங்களும், கடவுள் மறுப்பு கொள்கைகளும், கலாச்சார மீறல்களும் விஷ விருட்ங்களைத்தான் விதைக்கும் . இவற்றுக்கு கடிவாளம் இடுவதன் மூலம் கற்பழிப்பு, பலாத்காரங்களை முற்றிலும் நிறுத்திவிட முடியாது ஆனால் கட்டுபடுத்த முடியும்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னையின் வளர்ப்பினில் மட்டும் அல்ல அன்னை தேசத்தின் வழிகாட்டுதலிலும் இருக்கிறது.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...