சுஷில்குமார் ஷிண்டே இந்தியாவின் கவுரவத்தை குலைத்துவிட்டார்

சுஷில்குமார் ஷிண்டே இந்தியாவின் கவுரவத்தை குலைத்துவிட்டார் இந்து தீவிரவாதம் குறித்து பேசிய சுஷில்குமார் ஷிண்டே இந்தியாவின் கவுரவத்தை குலைத்துவிட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும் மவுனம்காப்பது ஏன்? என்பது புரியவில்லை. சுஷில்குமார் ஷிண்டேவை மந்திரி சபையிலிருந்து வெளியேற்றும் வரை நாங்கள் போராடுவோம் என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; அடுத்தமாதம் கூடவுள்ள பாராளுமன்றத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்து பாஜக. குரல் எழுப்பும், ஒருநாட்டின் உள்துறை மந்திரி எனும் முறையில் ஆர்எஸ்எஸ்., பாஜக. போன்றவை தீவிரவாதிகளை உருவாக்குவதாக நினைக்கிறீர்கள்.

நாங்கள்கூட இந்த முகாம்களில் கலந்துக்கொண்டுள்ளோம். எங்களையும் நீங்கள் தீவிரவாதிகளாக கருதுகிறீர்களா? அப்படி என்றல் , எங்களையும் சிறையில் தள்ளுங்கள் . ஆர்எஸ்எஸ்., பாஜக. போன்றவற்றை தீவிரவாத அமைப்புகளாக நீங்கள் கருதினால் , நீங்கள் ஏன் அவற்றை தடைசெய்யவில்லை?. தக்க ஆதாரங்கள் இருப்பின் அவற்றை ஏன் நீங்கள் வெளியிடவில்லை?

ஆர்எஸ்எஸ்.-ஐ போன்ற பெரியஇயக்கத்தில் யாராவது, எப்போதாவது அந்த இயக்கத்தின் பயிற்சி முகாம்களில் பங்கேற்றிருக்க கூடும். இதனைவைத்தே ஒட்டுமொத்த இயக்கமும்_ தீவிரவாத இயக்கம் என்பது அர்த்தமல்ல. இதைப்போன்று காங்கிரஸ் கட்சியிலும் நிகழ்ந்திருக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது சட்டம் தன்கடமையை செய்யட்டும்.

ஒருகுடும்பத்தில் கூட, தனி நபர் ஒருவர் செய்யும் ‘கிரிமினல்’ தனங்களுக்காக, அந்த ஒட்டு மொத்த குடும்பத்தையும் ‘கிரிமினில் குடும்பம்’ என்று கூறிவிட முடியாது என்று கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...