நம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையும் நேர்மையாகதான் அணுகுகிறார்கள் என்பதை

யூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை.

அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக பேசுபவர்களை, தங்களது தகிடு தக்கங்களை புட்டு புட்டு வைப்பவர்களை எல்லாம் களையெடுக்கும் எண்ணம் இருந்தால் அது கண்டிக்க தக்கது. அதே சட்டம் அவர்கள் பக்கம் திரும்பவும் வல்லது.

திமுக நியாயம் தர்மத்துடன்தான் செயல்படுகிறது என்பதை யாரும் இங்கு நம்ப தயாரில்லை. அப்படி இருந்திருந்தால் பிரதமர் மீது மிகவும் இழிவான விமர்சனங்களை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை  வைக்கும் கூட்டங்களை அதிகம் கொண்ட மாநிலமான தமிழகத்தில். இந்நேரம் வழக்குகள் மட்டுமே சிலாயிரங்களை கடந்திருக்க வேண்டும், கைதுகள் மட்டும் சில நூறுகளில் அடங்கியிருக்கவும் வேண்டும் அப்படி ஒன்றும் நடந்திடவில்லையே.

தேர்தல் சமயத்தில் திமுக.,வின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் “பிரதமர் நரேந்திர மோடியின் சித்ரவதையால் தான் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள்  உயிரிழந்தனர்” என்று அவதூறு பரப்பவில்லையா?.

“உதயநிதி ஜி தயவு செய்து உங்கள் பிரசாரத்தின்போது எனது தாய் குறித்து எதுவும் பேச வேண்டாம்! நீங்கள் சொன்னது அனைத்துமே பொய். பிரதமர் நரேந்திர மோடி ஜி என் தாயார் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். எங்கள் வாழ்வின் கடினமான நேரங்களில், பிரதமரும் கட்சியும்தான் துணையாக நின்றனர். உங்களின் பேச்சு எங்களைக் காயப்படுத்திவிட்டது” சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ்.

“உதயநிதி ஸ்டாலின் ஜி, உங்களுக்குத் தேர்தல் குறித்த அழுத்தம் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் பொய் சொல்லும் போதும், என் அப்பாவின் நினைவுகளை மதிக்காமல் பேசும் போதும் நான் அமைதியாக இருக்க முடியாது. என் அப்பா அருண் ஜெட்லியும், பிரதமர் மோடியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பைப் பகிர்ந்து கொண்டனர். அத்தகைய நட்பைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்”‘ அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி.

அப்போது யாரும் அவசரப்பட்டு வழக்கு தொடுத்திட வில்லையே?. ஆனால் இந்த ஆட்சி தொடுக்கும் வழக்குகள் எல்லாம் அவர்களது கட்சி குடும்பத்தை சுற்றியதாகவே இருக்கிறதே.நம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையும் நேர்மையாகதான் அணுகுகிறார்கள் என்பதை.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...