நம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையும் நேர்மையாகதான் அணுகுகிறார்கள் என்பதை

யூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை.

அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக பேசுபவர்களை, தங்களது தகிடு தக்கங்களை புட்டு புட்டு வைப்பவர்களை எல்லாம் களையெடுக்கும் எண்ணம் இருந்தால் அது கண்டிக்க தக்கது. அதே சட்டம் அவர்கள் பக்கம் திரும்பவும் வல்லது.

திமுக நியாயம் தர்மத்துடன்தான் செயல்படுகிறது என்பதை யாரும் இங்கு நம்ப தயாரில்லை. அப்படி இருந்திருந்தால் பிரதமர் மீது மிகவும் இழிவான விமர்சனங்களை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை  வைக்கும் கூட்டங்களை அதிகம் கொண்ட மாநிலமான தமிழகத்தில். இந்நேரம் வழக்குகள் மட்டுமே சிலாயிரங்களை கடந்திருக்க வேண்டும், கைதுகள் மட்டும் சில நூறுகளில் அடங்கியிருக்கவும் வேண்டும் அப்படி ஒன்றும் நடந்திடவில்லையே.

தேர்தல் சமயத்தில் திமுக.,வின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் “பிரதமர் நரேந்திர மோடியின் சித்ரவதையால் தான் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள்  உயிரிழந்தனர்” என்று அவதூறு பரப்பவில்லையா?.

“உதயநிதி ஜி தயவு செய்து உங்கள் பிரசாரத்தின்போது எனது தாய் குறித்து எதுவும் பேச வேண்டாம்! நீங்கள் சொன்னது அனைத்துமே பொய். பிரதமர் நரேந்திர மோடி ஜி என் தாயார் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். எங்கள் வாழ்வின் கடினமான நேரங்களில், பிரதமரும் கட்சியும்தான் துணையாக நின்றனர். உங்களின் பேச்சு எங்களைக் காயப்படுத்திவிட்டது” சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ்.

“உதயநிதி ஸ்டாலின் ஜி, உங்களுக்குத் தேர்தல் குறித்த அழுத்தம் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் பொய் சொல்லும் போதும், என் அப்பாவின் நினைவுகளை மதிக்காமல் பேசும் போதும் நான் அமைதியாக இருக்க முடியாது. என் அப்பா அருண் ஜெட்லியும், பிரதமர் மோடியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பைப் பகிர்ந்து கொண்டனர். அத்தகைய நட்பைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்”‘ அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி.

அப்போது யாரும் அவசரப்பட்டு வழக்கு தொடுத்திட வில்லையே?. ஆனால் இந்த ஆட்சி தொடுக்கும் வழக்குகள் எல்லாம் அவர்களது கட்சி குடும்பத்தை சுற்றியதாகவே இருக்கிறதே.நம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையும் நேர்மையாகதான் அணுகுகிறார்கள் என்பதை.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...