கறுப்பு பணத்தை மீட்க கோரி யாத்திரைசென்றேன் ஆனால் ஒரு ரூபாயை கூட மீட்கவில்லை

கறுப்பு பணத்தை மீட்க கோரி யாத்திரைசென்றேன் ஆனால் ஒரு ரூபாயை  கூட  மீட்கவில்லை கறுப்பு பணத்தை மீட்க கோரி நான் யாத்திரைசென்றேன். ஆனால் இதுவரைக்கும் ஒரு ரூபாயை கூட இந்த அரசு மீட்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் சித்ரகூட் நகரில் மாநில பா.ஜ.க செயற் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்கவந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. இந்த வருடம் டெல்லி, கர்நாடகா, சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கான சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது . அங்கு பா.ஜ.க., வுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் நேரடிபோட்டி. இந்ததேர்தல்களில் பா.ஜ.க.,வுக்கு நல்ல வாய்ப்புள்ளது. இந்ததேர்தல் முடிந்தவுடன், இந்த வருடமே பாராளுமன்றத்துக்கு தேர்தல்வரும். பாராளுமன்றத்துக்கு எப்போது தேர்தல்வந்தாலும், காங்கிரஸ் தோற்பது உறுதி.

இந்தியாவில் இருகட்சி ஆட்சிமுறை இல்லாமலிருக்கலாம். ஆனால், பா.ஜ.க எடுத்த முயற்சிகளால், நாடு இருகட்சி அரசியலுக்கு மாறிவிட்டது.
கடந்த மூன்று வருடமாக ஊழல்தான் முக்கிய பிரச்சனையாகிவிட்டது. எத்தனையோ ஊழல்கள் வெளிவந்துவிட்டன. மந்திரிகள்கூட ஊழல் வழக்குகளில் ஜெயிலுக்கு சென்றுவிட்டனர்.

இந்த ஊழல்களால், சாதாரண மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த அரசிலிருந்து விடுபடவிரும்புகின்றனர். விலைவாசி உயர்வும் முதுகெலும்பை முறித்துவிட்டதால், மக்கள் மாற்றம்காண விரும்புகின்றனர். கறுப்புபணத்தை மீட்கக்கோரி யாத்திரை சென்றேன். ஆனால் ஒருரூபாய் கூட மீட்கப்படவில்லை என்று அத்வானி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...