நரேந்திரமோடி குறித்து ஆதாரமற்ற ஊகங்களை பேசக்கூடாது

 நரேந்திரமோடி குறித்து ஆதாரமற்ற ஊகங்களை பேசக்கூடாது மத்தியில் ஆளும் ஐ.மு.,கூட்டணியின் ஊழல் ஆட்சியை நீக்க எதிர்க்கட்சிகளும் பாஜகவின் கூட்டணி கட்சிகளும் கவனம் செலுத்தவேண்டும் துரதிருஷ்ட வசமாக, இதை செய்யாமல் பாஜக முதல்வர்களின் மீது கவனம் செலுத்தி தங்களது சக்தியை வீணாக்குகிறார்கள் என்று பா.ஜ.க., செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியக்குழு கூட்டத்தில் பேசிய பிகார் முதல்வர் நிதீஷ்குமார், மதச்சார்பற்றவர் ஒருவர் மட்டுமே பிரதமர் வேட்பாளராக இருக்கமுடியுமென தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதுதில்லியில் ஞாயிற்றுக் கிழமை இதுகுறித்து பேசிய பா.ஜ.க., செய்தித்தொடர்பாளர் நிர்மலாசீதாராமன், ஐக்கிய ஜனதா தளத்தின் கருத்தை நிராகரித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குகூட்டணி ஒழுங்காக செயல் படாமல் அனைத்து துறைகளிலும் நாட்டை சரிவுப்பாதையில் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஊழல் ஆட்சியை நீக்கவேண்டும் என்கிற விஷயத்தில் எதிர் கட்சிகளும் பா.ஜ.க.,வின் கூட்டணி கட்சிகளும் கவனம் செலுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

துரதிருஷ்டவசமாக, ஐ.மு. கூட்டணியை நீக்குவதில் கவனம்செலுத்தாமல், பா.ஜ.க., முதல்வர்கள் மீது கவனம்செலுத்த தங்களது சக்தியை பயன் படுத்துகிறார்கள். ஆனால் பா.ஜ.க., தனது நோக்கத்தில் உறுதியாக இருக்கும்.

நரேந்திரமோடி குறித்து ஆதாரமற்ற ஊகங்களை பேசக்கூடாது. நரேந்திரமோடிக்கு எதிரான ஆதாரமற்ற அனைத்து ஊகங்களையும் நாங்கள் மறுக்கிறோம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.