கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான எம்.ஆர்.காந்தி நேற்று மர்மகும்பலால் வெட்டப்பட்டு காயமடைந்தார்.
இதை கண்டித்து இன்று பா.ஜ.க சார்பில் முழு பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவிலிருந்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
மாவட்டம் முழுவதும் 90 சதவித கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்தின் முக்கிய நகரங்களான நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குழித்துறை, கன்னியாகுமரி, குலசேகரம், திருவட்டார், ஆரல்வாய்மொழி, தோவாளை,சுசீந்திரம், ஈத்தாமொழி பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. டீக்கடைகள், பெட்டிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன . சிறுகடைகள் கூட அடைக்கப்பட்டுள்ளது . லோக்கல் பேருந்துகள் 95 சதவிதம் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து பதட்டமாக காணப்படுகிறது. மாவட்டம்முழுவதும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலிக்கு மட்டும் கான்வாய்போல மொத்தம், மொத்தமாக பாதுகாப்புடன் பேருந்துகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.