தமிழும் சமஸ்கிருதமும் என் இரு கண்கள் part 2

 இரண்டு வகையான முட்டாள்களை நாம் பார்க்கலாம். முதல் வகை முட்டாள்கள் தமிழ்தான் சிறந்தது என்று நினைப்பவர்கள், "சமஸ்க்ருதம் என்பது தமிழனுக்கு அந்நிய மொழி" எனும் வெள்ளையன் விரித்த வலையில் விழுந்த, முட்டாள் உலகின் முடிசூடா மன்னார்கள். இவர்கள்

சமஸ்கிருதத்தை "ஆரிய மொழி" என்றும், தன் வேர்களுக்கு தொடர்பில்லாத ஒரு மொழி என்றும், நினைக்கின்றனர். தான் தமிழ் பேசுபவன் என்ற ஒரே காரணத்தினால், தமிழ்தான் ஆதி மொழி, சமஸ்க்ருதத்தின் தாய் மொழியே தமிழ்தான் என்று சொல்லி திரிபவர்கள்.

மற்றொரு வகை, தமிழ் என்றாலே ஏதோ தென் கோடியில் பேசப்படும் ஒரு சிறு கூட்டத்தின் மொழி. அது வாயில் நுழைவதே கடினம், அதற்கு என்ன அப்படி ஒரு சிறப்பு இருக்கப் போகிறது என்று நினைக்கும் மனநோயாளிகள். எல்லா மொழியும் சமஸ்க்ருதத்தில் இருந்து வந்தவை, ஆகையால் தமிழும் சமஸ்க்ருதத்தில் இருந்து தான் வந்தது, என்று அடிப்படை தெரியாமல், மொழி ஆய்வாளர்களில் கட்டுரைகளை படிக்காமல் அடித்து விடுபவர்கள்.

உண்மைகள் என்ன என்று நிதர்சனமாய் ஆராய்வோமானால். தமிழும் சமஸ்க்ருதமும் ஆதி மொழிகள். தனித்தனியான வேர்களை கொண்டவை. ஆனால் இவை இரண்டுமே செம்மையான மொழியாக, சிறப்பான மொழியாக மாறியதே ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டதால். இரண்டின் வளர்ச்சியுமே, ஒன்றுக்கு மற்றது தன் வளங்களை பங்கிட்டுக் கொண்டதால். இரண்டுக்குமே ஆதாரமாய் சனாதன தர்மம் திகழ்ந்ததால், இவை இரண்டும் இந்த உலகில் உள்ள மற்ற எந்த மொழியை விட சிறப்பானதாக திகழ்கின்றன.

நம் தமிழில் சொல்லாடல் அற்புதமாக இருக்கும். தமிழை வீர மொழி என்று சொல்லலாம். அதன் ஒலியே ஒரு கம்பீரத்தை பிரதிபலிக்கும். அதன் ஆழமான, பழமையான‌ இலக்கியங்கள் உலகின் எந்த தலைசிறந்த மொழியையும் வணங்கச் செய்யும். தமிழை குறித்து நாம் தமிழனுக்கே சொல்வது அழகல்ல.

சமஸ்க்ருதம் எப்படிப்பட்ட மொழி ? அதை குறித்து பார்ப்போம்.

சமஸ்க்ருதத்தின் கிளை மொழிகள் இன்று உலகெங்கும் பரவி கிடக்கிறது. சமஸ்க்ருதத்தின் வேர் சொற்கள் ஐரோப்பிய மொழிகளிலும் ஆதாரமாய் இருக்கிறது. பாநிணியின் இலக்கண கோட்பாடுகள் சம்ஸ்க்ருதத்தை ஒரு அற்புதமான, கட்டுக்கோபான மொழியாக வைக்கிறது.

சமஸ்க்ருதத்தின் இலக்கிய மேன்மையை புகழாத உலக மொழி ஆய்வாளர்களே இல்லை என்று சொல்லலாம். காளிதாஸனின் காவியங்களை படித்து விட்டு மாய்ந்து போய் எழுதிய வெளிநாட்டு அறிஞர்கள் பலர். இப்படி கூட ஒரு மொழி இருக்க முடியுமா என்று திகைத்தவர் பலர். சமஸ்க்ருதத்தை மிக நுட்பமான அமைப்பை கொண்டது என்று பலருக்கு தெரியும். ஒரு கனிப்பொறியின் இயந்திர மொழியை ஒத்த மிக நுட்பமான இலக்கண நுட்பங்களை கொண்ட மிகச் சிறந்த மொழி என்று ஜெர்மானிய விஞ்ஞானிகளும், மொழி ஆயவாளர்களும் அதை கண்டு வியந்தனர்.

சமஸ்க்ருதத்தின் ஒவ்வொரு ஒலித்துகளுக்கும் பொருள் இருக்கும். (தமிழுக்கும் இந்த தகுதி உண்டு என்பது பலருக்கு தெரியாது) சமஸ்க்ருதத்தின் ஒவ்வொரு ஒலித்துகளும் ஒரு ஆற்றலை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு "அ" எனும் எழுத்து ஆரம்பம் இல்லாத தன்மையை, அனைத்திற்கும் ஆதாரமான தன்மையை குறிக்கும் . "இ" எனும் எழுத்து, பலம், ஆரோக்கியம் ஆகிய தன்மைகளை குறிக்கிறது. இப்படி ஒவ்வொரு எழுத்தும்/ஒலியும் ஒருவிதமான தன்மையை/ஆற்றலை குறிக்கிறது. அது போலவே இரு எழுத்துக்கள் இனையும் போது இருவேறு ஆற்றல்கள் இனைவதால், அது ஒரு ஆற்றல் கலவையை உண்டாக்குகிறது. இதை குறித்து எழுதும் முன் சிலவற்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

இறைவனே ஆற்றலின் ஆதாரம், அனைத்து வித ஆற்றலின் அடிப்படை. "ஆத்மா" என்று சொல்லப்படுவதே நுட்பமான ஆனால் எல்லையற்ற ஆற்றலைதான் குறிக்கிறது. அதனால்தான் ஆத்மாவை அழிக்க முடியாது என்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஆற்றலை அடிப்படையாக கொண்டதாக‌ இருக்கிறது. இந்த உடல் அழிந்ததும் அதற்கு ஆதாரமாய் இருந்த‌ அடிப்படை ஆற்றல் வேறு உடலுக்கு செல்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. நம் உடலின் உள்ள ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த ஆற்றலை உருவாக்க முடியுமா ? ஆற்றலை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. ஆத்மா என்பதை யாரும் உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்று அதனால்தான் சொல்கிறார்கள். ஆற்றலுக்கு ஆரம்பமும் இல்லை, அழிவும் இல்லை. நீங்கள் கேட்கலாம் ஏன் அணுவிலிருந்து ஆற்றலை உண்டாக்குகிறார்களே ? என்று. ஆனால் உண்மையில் ஆற்றல் உண்டாக்க படுவதில்லை, ஏற்கனவே வேறு உருவில் ஒடுக்கப்பட்டுள்ள‌ ஆற்றல் வெளிப்படுகிறது அவ்வளவுதான். இந்த பிரபஞ்சத்தின் மொத்த ஆற்றல் குறைவதும் இல்லை, கூடுவதும் இல்லை. அவை பலவிதமான தன்மைகளை கொண்டதாகவும், ஒன்று மற்றதாய் மாறிக் கொண்டேயும் இருக்கிறது.

சரி இதற்கும் சமஸ்க்ருதத்திற்கும் என்ன சம்பந்தம் ?

சமஸ்க்ருதத்தின் ஒவ்வொரு ஒலித்துகளும் (எழுத்துக்குள்) இந்த பலவிதமான ஆற்றல்களின் ஒரு குறிப்பிட்ட தன்மையை கொண்டதாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட ஒலியை நாம் எழுப்பும் போது அது அந்த குறிப்பிட்ட ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இப்படி பலவிதமான ஆற்றல்களின் சங்கம‌மாய் உள்ளதுதான் மந்திரங்கள் எனப்படுபவை. அதை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்

Thanks; Enlightened Master

One response to “தமிழும் சமஸ்கிருதமும் என் இரு கண்கள் part 2”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...